உலகை மாற்றிய விஞ்ஞானி, குரங்குமனிதனா?

 


சிறுவனாக இருந்தபோது, பெரும்பாலும்  பள்ளிக்குச் செல்லாமல், ஊர் சுற்றுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்தார்தட்டான்மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டு, அணில், புறா என விலங்குகளுடன் தன் பொழுதைக் கழிப்பார். விலங்குகளிடம் அன்பாக இருப்பார்

இதனால் தந்தைக்கு  மகன் மேல் ஏகக் கோபம்.  “உனக்குப் படிக்கவே பிடிக்கலை; படிப்பும் ஏறல; நாய் பின்னாடி ஓடுறது; எலி பிடிக்கிறது இதுதான் உனக்குபிடிச்சது. உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். இதனால் குடும்ப மானமே போகுது!” எனத் தன் மகனை கடித்து கொள்வார் தந்தை
  அந்தத் தந்தைக்கு, பின்னாளில் தன் மகன் பெரிய விஞ்ஞானியாகப் போகிறான்.. உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பெறப்போகிறான் என்பது தெரியவில்லை.

டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். ஸ்ரூவ்ஸ்பெரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். சிறுவயது முதல் விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அதீத ஆர்வம் காட்டினார். தந்தையார் ராபர்ட் டார்வின், தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று விரும்பினார் எடின்பரோ  பல்கலைக் கழகத்தில்   ராபர்ட்  டார்வின்  மகனைச் சேர்த்தார்; ஆனால்  இயற்கையியல் துறையிலும்நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை.

பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வினின்   பிறந்த தினம் பிப்ரவரி 12  இயற்கை சிந்தனைவாதியான,  சார்லஸ் ராபர்ட் டார்வின் (இதுதான் இவரது முழுப்பெயர்), இங்கிலாந்தில்,  ஸ்ரூவ்ஸ்பெரி ( ShrewsburyShropshire)  என்ற ஊரில், 1809, பிப்ரவரி, 12ஆம் நாள் பிறந்தார் (12 February 1809 – 19 April 1882). 
18 &19ம் நூற்றாண்டுகளில் உலகின் சகல விஷயங்களிலும் மதத்தின் கையே ஓங்கி இருந்தது. அனைத்தும் மதத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.. அனைத்து தகவல்களும் பதிவுகளும், கண்டுபிடிப்புகளும், செயல்பாடுகளும் ஊர்த்திருவிழாக்களும் மதத்தைச் சார்ந்தே, அவர்களின் ஒப்புதலின் பேரிலேயே  நடைபெற்றன. அரசும் கூட மதவாதிகளின் கைக்குள்தான். அதனால்தான் கலீலியோ பூமி சூரியனைச் சுற்றுகிறது  என்று சொன்ன போது, மதவாதிகள் அதிர்ச்சியுற்று, கோபப்பட்டு, கடவுள் உருவாக்கிய மனிதன் உள்ள பூமி சூரியனைச் சுற்றுவதா, அது ஒரு போதும் இருக்காது, நடக்கவே  நடக்காது என்றும் நினைத்தனர். எனவேதான், கலீலியோ அதன் அடிப்படையில் அரச நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டார்; தண்டிக்கப்பட்டார்.. கலீலியோ, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னது கடவுள் மறுப்பு செயல். அவதூறு/கடவுள் நிந்தனை   என்று சொல்லப்பட்டுகுற்றம் சாட்டப்பட்டு  வீட்டுச் சிறையில்அடைக்கப்பட்டு அங்கேயே வாடினார்.
பூமிக்கே இப்படி என்றால் பூமியில், கடவுள் படைத்த அற்புத உருவம் மனிதன் மட்டுமே. அவன்தான் கடவுளின் படைப்பில் உயர்ந்தவன் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், மனிதன்   குரங்கு போன்ற இனத்திலிருந்து உருவானது என்றால், மதவாதிகள், தேவாலய மக்கள் இவரை  நடு ரோட்டில் நிற்கவைத்தே சுட்டுவிடுவார்கள். ஆனாலும் கடலில் பல மாதங்கள் பயணம் செய்து, ஆங்காங்கே, பல உயிர்களையும், விலங்குகளையும் சேகரித்து ,ஒப்பிட்டு, அவற்றின் உடல் உள்ளுறுப்புகளை  ஆராய்ந்து அதன் பின்னரே, உயிரிகளின் தோற்றம்(Origin of  Species ) என்ற நூலை எழுதினர் சார்லஸ் டார்வின்.. ஆனால் இதனை எழுதுவதற்கு அவர் சுமார் 20 ஆண்டு காலம் அதற்கான தகவல்களை, அதன் உண்மைகளை சேகரித்தார் என்பதே உண்மை.
சார்லஸ் டார்வின். பரிணாமத்தின் தந்தை என்று போற்றப்பட்டாலும்  ,உண்மையில், டார்வின் அவரது பரிணாமக் கொள்கையை உருவாக்கிய காலகட்டத்திலேயே, ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் (Alfred Russell Wallace) என்ற மற்றொரு விஞ்ஞானியும் இதே கருத்தை முன்னிறுத்தி எழுதினார்.. வெளியிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக , டார்வின் மட்டுமே, இயற்கையியல் தேர்வு மூலம் நிகழும் பரிணாமக் கொள்கைக்காக, அவரது புத்தகமான உயிர்களின் தோற்றம் (1859 ,book ‘On the Origin of Species) என்ற புத்தகம் வெளியாகும் முன்னரே, டார்வின் அவரது பல்வேறு  பணிகளுக்காக மதிக்கப்பட்டார். மேலும் காரணம் ஆல்பிரட் வாலஸ் அப்போது பெரிதும் பலரால் அறியப்படாதவராக இருந்ததும் கூட ஒரு காரணம்.
எனவே விஞ்ஞானிகளும் மக்களும் சார்லசின் பரிணாமக் கொள்கை வெளியீட்டில் , சார்லஸ் டார்வின் பக்கமே ரொம்பவும் சாய்ந்தனர். அவரின் கருத்துக்களைக் கேட்டனர். அந்த காலகட்டத்தில்உயிர்களின் தோற்றம்புத்தகம் வெளியானபோது, அது ஒரு பரபரப்பான வெற்றியையும் பெற்றுத் தந்தது.  மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெருமதிப்புடையவை.
சார்லஸ் டார்வின்  தமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்றார். ஆனால் கிறித்தவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேர மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில்  தாவரவியல்  துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.

உயிரினங்களில், மாற்றங்கள் எப்படி,   ஏன்  ஏற்படுகின்றன?”  என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்றும் கருதினார்.
புகழ்பெற்ற அவரது கடற்பயணத்தில்  கலபோகஸ் (Galapagos Island)தீவுகளில்,  புதிய வகையான பறவைகள்தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயப்பட்டார். அந்த ஆய்வின் பயனாகபரிணாம வளர்ச்சிக் கொள்கைமுடிவுக்கு அவர் வந்தார்இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார்அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரை யாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை  லண்டனில் வெளியிட்டார்

1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. பீகிள் பயணத்தில் சேகரித்த ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதேபரிணாம வளர்ச்சிக் கொள்கைஆகும்.  1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். “The Origin of Species by Natural Selection” அதாவதுஇயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்”.இது புதிய இனங்களின்  உருவாக்கத்திற்கு வழியேற்படுத் தும் என்றும கண்டறிந்து கூறினார் டார்வின்இக்கருத்துகளின் அடிப்படை யிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

சார்லஸ் டார்வின், தனது புத்தகம்  உயிரிகளின்  தோற்றம் வெளிவரும் முன்பு சுமார் 20 ஆண்டுக்காலம் மௌனமாக சும்மாவே இருந்தார். டார்வின் உயிரிகளின் தோற்றம் பற்றி அவர்  எழுதப்  போவதாக சொன்னதுமே, அவரைச் சுற்றி உள்ளவர்கள் . அவர் என்னவோ ஒரு கொலைக்கு   தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்போவது போல, அவரை ரொம்பவும் கேலியும், கெக்கலியும் , நையாண்டியும் செய்தனர் .. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு, இதுவரை யாரும் செய்யாதது.. உலகைப் புரட்டிப் போட்ட, யாரும் நம்பவே  முடியாத ஒன்றைக் கண்டுபிடித்தத்திற்கு, உயிரிகளின் மிக அடிப்படையான ஆதாரத்தை, ஆதாரங்களோடு , உண்மையை வெளிப்படுத்துவதற்குஒரு மனிதன், ஒரு தனி மனிதன் தன வாழ்க்கையில்,  ஏராளமான போராட்டங் களையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது
பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர். பல மதவாதிகள் இவரைக் குரங்கு என சித்தரித்தார்கள். பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். காரல்மார்க்ஸ் தன்  நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார்.
உயிர்களின் தோற்றம் என்ற புத்தகத்தின் முழுப்பெயர் : ” On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life” இந்த புத்தகம் முதன் முதல் 1859 ம் ஆண்டு, நவம்பர் 24ம் நாள் மதியம் 1.00 மணிக்கு வெளியானது. அப்போது அது வெளியான அன்றே அதன் 1250 பிரதிகளும் விற்று தீர்ந்துவிட்டன.. அதனுடைய, அன்றைய விலை 15 ஷில்லிங். 1872 க்குள் 6 பதிப்புகள் போடப்பட்டன. 1860 ல் 3000 புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதில்  ஆச்சரியப் படவேண்டிய விஷயம், என்னவென்றால்யாரெல்லாம் டார்வினை, இவர் குரங்கு, இவர் அப்பா குரங்கு, இவரின் மூதாதையர் குரங்கு என்றெல்லாம், திட்டி, அவரைப்பற்றி ,டார்வின் தலையையும், குரங்கு உடலையும் சேர்த்து கேலி சித்திரமும் போட்டார்களோ , அவர்களும், மத குருமார்களும் தான், டார்வின் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என்பதை அறிய  எல்லா புத்தகங்களையும் வாங்கிவிட்டனர். ஆனால் டார்வினின் கருத்துகள் அறிவியல் உலகை வேரோடு அசைத்தது. அவரின் கருத்துகள் வணிக உலகிலும் உலவின. சமுதாயத்திலும் பல மாற்றங்களை உண்டுபண்ண அவரின் கருத்துக்கள் உதவின.
உயிர்ளை  எல்லாம் ஒரே நாளில்தான் ஆண்டவன்  உருவாக்கினார் என்று உலகின் அனைத்து  மதங்களும் போதித்து  வந்தன. அந்தக் கருத்தினை , டார்வினின் புத்தகம் அடித்து நொறுக்கி, தூள் தூளாக்கி தவிடுபொடியாக்கியது என்பதால் அனைத்து மதவாதிகளும் கொதித்து  கொந்தளித்து டார்வினை உண்டு இல்லை என்று ஆக்கிவிடத் துடித்தனர். ஆனால் டார்வின் அமைதியாக தன் உயிரின சேகரிப்பால், அவற்றின் விளக்கத்தால், அவர்களுக்கும், அவைகளுக்கான விளக்கமும் தர முடிந்ததுஉயிரினங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக   மாற்ற மடைந்து, சின்ன உயிரிகளிலிருந்து பெரிய உயிரியாக மாற ஒவ்வொரு விலங்கினமாக மாறி மாறிஇன்றைய உருவத்துக்கு வந்திருக்கின்றன என்பதையும் தெளிவாக ஆதாரத்துடன்  தெரிவித்தார்.… எதுவும் ஒரே நாளில் படைக்கப்பட்டதல்ல என்பதை  தன் ஆராய்ச்சியின் மூலம் பல்வேறு  ஆதாரங்களுடன் விளக்கினார் டார்வின். இதனால் மதவாதிகளுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அனைவரும் கொதித்துக் கிடந்தனர்.
அதன் பின்னர் கி.பி. 1860-ஆம் ஆண்டு  ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்பி வழிகிறது. வெளி  நாடுகளிலிருந்து வருந்திருந்த விஞ்ஞானிகள் எல்லாம் என்னதான் நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில் ஒருவருடன் ஓருவர்  கிசுகிசுத்தவாறு இருக்கின்றனர். உடன் அமர்ந்திருக்கும் பிரபு வர்க்கத்தினர்கள்   நடைபெற இருக்கும் மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருகின்றனர். இதற்கிடையில் மக்கள் கூட்டத்தாலும் ஆக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது.
ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டுஅதன் காரணம் என்ன தெரியுமா? டார்வின் வெளியிட்டவெறும் 230 பக்கங்கள் மட்டுமே கொண்ட, உலகைப் புரட்டிப் போட்ட, அந்தக் குட்டிப் புத்தகம் தான்.. உயிரினங்களின்  தோற்றம்தான். இந்தக் குட்டி புத்தகம் ஏற்படுத்திய சூறாவளியில்   விவிலியமும் பறந்தே போய்விட்டதுஇறைவனின் மறைவாக்கு கேள்விக் குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களால் பொறுக்க முடியவில்லை. கடவுள் உருவாகிய மனித இனம் எப்படி குரங்கு போன்ற இனத்திலிருந்து வந்திருக்க முடியும்.. இந்த மதவாதிகளின் கூச்சல், குழப்பம், சச்சரவைக் கண்டு, அவர்களை  பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதர வாளர்களுக்கு சவால் விட்டனர்.
மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு  அமர்ந்திருந்தனர்விவாதம்  தொடங்கியது.
வேத நூலை முத்தமிட்டு, சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையைக் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் பிஷப், ”மக்களே! பரமபிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின், நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும், முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள். இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாகச் சொல்வது தன் பாட்டன் வழியாகவா, பாட்டி வழியாகவாஎன்று கேலி செய்தார். இறுதியில்டார்வினின் ஆராய்ச்சி  சத்திய மறைநூலின் புனிதக் கொள்கைக்கு எதிராக இருக்கிறது என்று கூறினார்..
புனிதக் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் சீடர் ஹக்ஸ்லிவெறியூட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு ஏராளமான துணிவு தேவை.. மதமெனும் இருட்டுக் குகைக்குள் இருக்கும்   மக்களை அறிவியல் உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற் காவே  அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியைப் பற்றி  விரிவாக பேசினார். அங்கு வீற்றிருந்த மக்களில் ஒரு பகுதி  மக்களையாவது உண்மையை ஒத்துக் கொள்ள வைக்க முடிந்ததே என்ற எண்ணத்தில் பேசினார் ஹக்ஸ்லி. பின்னர் பொது விவாதம் முடிந்தது.
ஆனால் டார்வின் எழுப்பிய அறிவியலின் புரட்சிப்புயல் ஓயவில்லை. குரங்குகளைக் கண்ட இடமெல்லாம் கல்லாலடித்து துரத்தினார்கள் மறை உணர்வு கொண்ட மக்கள். இங்கிலாந்தின் தேவாலயங்களில், கருப்பு உடை தரித்த விவிலிய பக்தர்கள் தங்களின்  கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள்.
இதுதான் அன்றைய உலகில் நடந்த தகவல். ஆனால் இன்று மனித இனம் குரங்கின அமைப்பிலிருந்து தான் உருவானது என்றும், மனிதனுக்கும், டால்பினுக்குக்கும் கூட பொது முன்னோடிகள் உண்டு என்ற உண்மைகள் வெளிவந்து, அறிவியலின் தலை நிமிர்ந்த உண்மை கம்பீரமாக எழுந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
பரிணாமக் கொள்கையில் கூறப்படும்,  “survival of the fittest ”  என்னும் சொல்லாடல் முதல் பதிப்பில் பயன்படுத்தப்படவே இல்லை. இந்த  உருவாக்கியவர் ஹெபெர்ட் ஸ்பென்சர் ( Herbert Spencer) என்ற  தத்துவ ஆசான்தான்.. நாம்  பரிணாமத்தில் பேசும் ‘”தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்”’  (“survival of the fittest” ) என்ற  பதங்கள் அடங்கிய  மந்திரச்சொல் டார்வினின் முதல் பதிப்பில் வரவேயில்லை. 5ஆம் பதிப்பில்தான் வந்தது. மேலும், நாம் இப்போது பயன்படுத்தும் பரிணாமம் (Evolution ) என்ற சொல்லும் முதல் பதிப்பில் இல்லை. 6ம் பதிப்பில்தான் இணைக்கப்பட்டது. ஏனெனில் இந்த வார்த்தைகள் கொஞ்சம் முரண்பட்டவை என டார்வின் கருதியதால், இவற்றை அவர் முதல் பதிப்பில் பயன்படுத்தவில்லை.
டார்வினின் திருமணமும் கூட  சொந்தத்தில்தான்டார்வின் தனது நெருங்கிய முதல்   இரத்த   சொந்தத்திதில் எம்மா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். டார்வின் எம்மா தம்பதிக்கு 10 குழந்தைகள் பிறந்தன.  6பையன்கள்; 4 பெண் குழந்தைகள். ஆனால் அவரின் செல்ல மகள் ஆன்னி டார்வினை அவளின்  பத்தாவது வயதில் பறிகொடுத்ததால், அவருக்கு கடவுள் நம்பிக்கை போனது. 3 குழந்தைகள் இறந்து போயின.
சார்லஸ் டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில்Westminster Abbey) உடல் அடக்கம்  இரண்டு பெரிய விஞ்ஞானிகளுடன், ஜான் ஹெர்ஸ்ஷல் மற்றும் சர் ஐசக் நியூட்டன் (John Herschel and Isaac Newton)  இவர்களுடன் ஏப்ரல் 26 ல், மிகுந்த மரியாதையுடன்  அடக்கம் செய்யப்பட்டது..
ஆனால் சார்லஸ் டார்வின் இறந்து ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர் அவரின் கோட்பாட்டை லண்டனின் தேவாலய சர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது.
------------------------------------------------
பேராசிரியர் மோகனா
(தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)
அவர்கள் எழுதிய நெடுங்கட்டுரையின் சுருக்கம்
நன்றி - http://www.tnsf.co.in/

------------------------------------------------------------------------------------ 

8 கருத்துகள்:

  1. ஒரு பெரிய விமரிசனக் கட்டுரையாக அமைந்து விட்டது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. டார்வின் பற்றி அறியாச் செய்திகள் பலவற்றை வழங்கியமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. அப்பாடியோவ்... அந்த காலத்தின் பிரமாண்ட படைப்பு ... ஹாட்ஸ் ஆப் சார்லஸ் ராபர்ட் டார்வின் ...

    பதிலளிநீக்கு
  4. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டில் உள்ள பிழைகள் உங்களுக்குத் தெரியாதா? இன்றைய தேதியில் பலர் டார்வினின் தத்துவத்தை முழுவதும் நம்புவதில்லை. மேலும் அது நிரூபிக்கப்பட்ட உண்மையும் கிடையாது. மக்கள் கண்மூடித்தனமாக கடவுள் சக்தி பேசிக்கொண்டிருந்த காலத்தில் துணிச்சலாக மதத்திற்கு எதிராக எழுந்த ஒரே காரணத்திற்க்காக டார்வினை நாம் பாராட்டலாம்.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு கட்டுரை..... நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. டார்வின் மற்றும் அவரது சீடர்களின் மன உறுதியைக் கண்டு வியந்தேன் !மதவாதிகள் கை அன்று மட்டுமா ஓங்கியிருந்தது இன்றும் நிலைமை அப்படித்தானே இருக்கிறது ?

    பதிலளிநீக்கு
  7. சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப்பாடியுள்ளார். ஆன்மிகம் என்பதாலும், பிறந்திளைக்கும் பிறவிக் கோட்பாடாய்க் கருதப்பட்டதாலும் விஞ்ஞானமாய் அறியப்படவில்லை. டார்வினுக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே மாணிக்கவாசகர் எழுதியது.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு கட்டுரை. டார்வினின் கோட்பாட்டில் ஒரு சில பிழைகள் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள், மற்றும் மத அறிஞர்கள் சொல்லலாம். ஆனால், அடிப்படைக் கருத்து அதாவது ஒரே நாளில் உயிரினங்கள் உருவாகவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாதே!

    பதிலளிநீக்கு