முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!





- நா.முத்துநிலவன் -
(கடிதஇலக்கியம்)
என் அன்பு மகளுக்குஉன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும்உன் வகுப்பு  நண்பர்களும்உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.              
அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம் என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை விடவும் அதாவது நீ பள்ளியில் படித்த காலத்தைவிடவும்- தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம் முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.

கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான நேர்வழி என்பது ஒரு பகுதிதான். அதைவிடவகுப்பிலும்விடுதியிலும் இருக்கும்போதுமற்றவர்களோடு எப்படிப் பழகுவதுநல்லது கெட்டது எதுஎன்று தெரிந்து கொள்வதுதான் உண்மையான பயன்தரும் கல்வி. சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள் ஆசிரியர்கள் வழியாகப் பாதியும்ஊடகம் மற்றும் செய்தித்தாள்களின் வழியாகவே மீதியும்கற்றுக்கொள்வதுதான் உண்மையான கல்விஅறிவு!  அப்பாவும் அம்மாவும் கற்றுத்தர முடியாத பலப்பல விஷயங்களைப் பள்ளிக்கூடமும்கல்லூரியும் கற்றுத்தரும் என்பதற்காகத்தான் பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளிகல்லூரிகளுக்குப் படிக்க அனுப்புகிறார்கள்.  
ஆனால் உன்போலும் பதின்பருவ (teen-age) பிள்ளைகள் பெரும்பாலான நேரத்தை செல்பேசிகணினிதொலைக்காட்சியுடனே செலவிடுகிறீர்கள். ஒருவகையில் அதுவும் படிப்புத்தான் என்றாலும்என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். நீ எனது செல்பேசியில் திருக்குறளையும் பாரதியார் கவிதைகளையும் பதிவிறக்கம் செய்து விரும்பிய போதெல்லாம் விரும்பிய பக்கத்தை எப்படிப் படிக்கலாம் என்றும் சொல்லித்தந்ததை நான்என் நண்பர்களிடமெல்லாம் காட்டிக்காட்டி மகிழ்கிறேன். அவர்கள் வியப்புடன் இது எப்படிங்கஎன்செல்பேசியிலும் வச்சுத்தாங்களேன்?“ என்று சொல்லும் போது இது என்மகள் வச்சுத் தந்ததுஎனக்குத் தெரியலையே! அடுத்த முறை விடுமுறைக்கு வரும்போது என்மக கிட்ட கத்துக்கிட்டு உங்களுக்கும் சொல்லித் தர்ரேன்என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 
இப்படி மின்-நூல்களைப் படிப்பதுமின்-இதழ்களைப் படிப்பது என்பன போலும் பயன்பாடுகள்  ஒருபக்கமிருக்கவேறுபல திசைகளில் நேரவிரயத்துடன்நம்மைப் புரட்டிப் போட்டுவிடும் ஆபத்தும் அவற்றில் அதிகம் எனும் எச்சரிக்கை மிகவும் தேவை. அதுவும் முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விடமுகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக்கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும்உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்துவிடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும்.
இன்றைய பதின்பருவப் பிள்ளைகள் பலர்மிகுந்த பன்முக- திறமைசாலிகளாக இருப்பதைசில செய்தி-தொலைக்காட்சி-களில் பார்த்து வியந்து மகிழ்ந்துமிருக்கிறேன்.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஆயுதம் செய்வோம்நேர்படப்பேசு முதலான பல நிகழ்ச்சிகள்விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயா-நானா விவாதங்கள்சூப்பர்-சிங்கர்கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் வரும் சில பேச்சு மற்றும நேரலையாகக் கருத்துக்கூறும் நிகழ்ச்சிகளில் நான் பார்த்து மகிழ்ந்த இந்தத் தலைமுறைப பிள்ளைகள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அப்போதெல்லாம்இவர்கள்நமது சங்கப்புலவர்கள்திருவள்ளுவர்கம்பர்பாரதிபட்டுக்கோட்டை முதலான நம் முன்னோரிடமிருந்துமட்டுமல்லமார்க்ஸ்அம்பேத்கர்ஈ.வெ.ரா.பெரியார்நியுட்டன்கலிலியோஷேக்ஸ்பியர்கியூரி முதலான பெரும் மேதைகளிடமிருந்தும் பெற வேண்டிய சாரங்களை எமது தலைமுறையைக் காட்டிலும் இவர்கள் சரியாகவே உள்வாங்கியிருக்கிறார்கள் என்றும் நினைந்து  மகிழ்ந்து  நெகழ்ந்து பெருமைப்பட்டுக்கொள்வேன் போ!
இதுபோல் நல்லநிகழ்ச்சிகளை பார்த்துரசிக்காமல்குறும்புசெய்து திட்டும்குட்டும் வாங்காமல்நல்ல விஷயங்களை எல்லாருமாய்ப் பேசி சிரித்து மகிழாமல்வெளியில் போய் விளையாடி மகிழாமல்வீட்டுக்குள் உட்கார்ந்து ஓடிவிளையாடு பாப்பா” என்று மனப்பாடம் செய்துமதிப்பெண் வாங்குதை எப்படிச் சாதனைஎன்று சொல்லமுடியும்அவர்கள் குழந்தைப் பருவத்தையே படிப்புக்காகத் தியாகம் செய்து என்ன ஆகப்போகிறதுஎன்று கேட்க விரும்புகிறேன்.
முதல் மதிப்பெண் வாங்கும் எந்த மாணவரும் விளையாட்டுஓவியஇசை முதலான பலப்பல வகுப்புகளையே அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதானேபல பள்ளிகளில் முக்கியமாக மாநில முதலிடம்இரண்டாமிடம்மற்றும் 450க்கு மேல் 800பேர்” என்று விளம்பரம் செய்து கல்லாக்கட்டும் தனியார்பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு அரசாங்கப் பாடத்திட்டத்தில் இருக்கும் ஓவியம்,விளையாட்டு,சுற்றுச்சூழல் கல்வி வகுப்புகளே நடத்தப்படுவதில்லை! ஒரே புத்தகத்தை இரண்டுவருடம் உருப்போடுவதும்அதைப் புள்ளிபிசகாமல் வாந்திஎடுத்து” எழுதிக்காட்டுவதுமாய்க் கிறுக்குப் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது வேண்டுமானால் சாதனதான். பன்முகத் திறமையை வளர்த்துக்கொண்டுஎந்தத்திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம்முடியாவிடில் கல்லூரிப் பருவத்திலாவது முடியவேண்டும். அவ்வளவுதான். பிடித்த துறையில் தேர்ச்சி பெற்றபின் அதை வாழ்க்கையில் தொடர்வது முக்கியமாமுதல்மதிப்பெண்ணோடு மறந்துவிடுவது முக்கியமா யோசித்துப் பார்!  
இதனால்தான் மகளேஎனது உரைவீச்சு மற்றும் பட்டிமன்றப் பேச்சுகளின ஆரம்பத்தில் எந்த இடத்திலும் நான், “என் எதிரே மலர்ந்த முகங்களோடு அமர்ந்திருக்கும்இன்றைய மாணவர்களான- எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களானஎதிர்கால சட்டமன்ற உறுப்பினர்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! மத்திய-மாநில அமைச்சர் பெருமக்களே! பாரத நாட்டின் பிரதமர்களே! குடியரசுத்தலைவர்களே! கவி பாரதிகளே! காரல்மார்க்ஸ்களே! அண்ணல் அம்பேத்கார்களே! தந்தை பெரியார்களே! கல்பனா சாவ்லாக்களேஅன்னை தெரஸாக்களே!” என்று சொல்லும்போது கூட்டமே ஆரவாரித்து கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்து போகும்.  இது பேச ஆரம்பிக்கும்போதேபார்வையாளர்களைக் கவர நான் செய்யும் உத்திதான் எனினும்அதிலிருக்கும் இளைஞர்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பும் பொய்யல்ல!
ஆனால்எனதுநண்பர் ஒருவர் -மத்திய அரசின் விருதுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர்- சொன்ன ஒரு கருத்தும்மற்றொரு பக்கம் உறுத்தத்தான் செய்கிறது. அவர் சொன்னார் – “சார்நாங்கள்ளாம் 1985மற்றும் 89ஆம் ஆண்டுகளில் நடத்திய பெரும்பெரும் போராட்டங்களால்இப்போது எங்கள் சம்பளமும் சரி பென்ஷனும் சரி உயர்ந்து நிற்கிறது. நான் 37ஆண்டு சர்வீசில் கடைசியாக வாங்கிய ரூ.60,000 சம்பளத்தைஎன்மகன் தனது முதல்மாதச் சம்பளமாக வாங்குகிறான்”  “ஆகாஇதுவல்லவா மகிழ்ச்சி” என்று நான்சொல்லஅவர் சற்றும் மகிழ்ச்சியில்லாமல்உச்சுக்கொட்டிக்கொண்டு, “அட போங்க சார்வாழ்க்கைன்னா என்னன்னு  தெரிஞ்சிக்கறதுக்கு முந்தியே வாழ்ந்து முடிச்சிடுறாங்கெ சார் பெரியபடிப்பு,  கைநெறய சம்பளம்ஆனா வாழ்க்கைன்னா என்னன்னே தெரியலசார்! அல்பவிஷயத்த பூதாகரமாக்கி அடிச்சிக்கிறதுபெரிய விஷயங்கள புரிஞ்சிக்காமயே லூஸ்ல விட்டுர்ரதுன்னு இருந்தா என்ன சார் அர்த்தம்? கல்யாணமாகி 2 வருசத்துல டைவோர்ஸ் கேட்டா60 வயசுல நா என்ன சொல்றது?  என்று அவர் கண்கலங்கிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
யோசித்துப் பார்த்தால்வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்காமலே போனதற்குக் காரணம் என்னஅந்தப் பாவத்தை நமது பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அல்லவா செய்துவிட்டன என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது! குதிரைக்குக் கண்படாம் போட்டது போலஅந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காமல் நேராகபார்! மதிப்பெண் மட்டும் தெரிகிறதாசரி எனபயிற்சிபெறும் யாரும் யதார்த்த உலகத்தை விட்டு அந்நியப் படுவதன் காரணமும் பள்ளியில் புரியாமலே- மனப்பாடம் செய்வதில் தொடங்கிவிடுகிறது அல்லவா?
இன்றைய இளைய சமுதாயம் நன்றாகப் படிக்கிறது ஆனால்படிப்பை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறது?  எதைஎதற்காகப் படிக்கிறார்கள் என்று தெரிந்துதான் படிக்கிறார்களா
எம்.பி.பி.எஸ்.படித்தால்,மருத்துவர்ஆகலாம்,                                        பி.ஈ.படித்தால்பொறியாளர்ஆகலாம்.                                                பி.எல்.படித்தால்வழக்குரைஞர்ஆகலாம்,                                            ஐ.ஏ.எஸ்.படித்தால்மாவட்டஆட்சியர்ஆகலாம்,                                      எதுவுமேபடிக்காமல்மந்திரியும்ஆகலாம்.                                          ஆனால்,என்னபடித்தால்மனிதர்ஆகலாம்?
                                           
மனிதரைப் படித்தால்தான் 
நாமும் மனிதராகலாம்.   - என்பது 
எனது ஆழ்ந்த நம்பிக்கை.
அதனால்நீ என்ன வேண்டுமானாலும் படிஎல்லாவற்றுக்குள்ளும் மனிதரை மட்டும் மறக்காமல் படிஅல்லது மனிதருக்காக எதுவேண்டுமானாலும் படி. ஆனால்நேர் எதிராகச் சிலர்படிப்பு ஏற ஏற மனிதரை மறந்துவிடுகிறார்கள் அல்லது மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறந்து போகிறார்கள்! 
கலைஇலக்கிய வாதிகள் பலர் பள்ளி கல்லூரிப்படிப்பே இல்லாதவர்கள். ஆனால்அந்தப் படிக்காதவர்கள்தான் பல நூறு பேர்களுக்குப் பட்டங்களையே தருகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமாநான் சொல்வது படிக்காமலே பல கல்லூரிகளை நடத்திப் பட்டம் வழங்கும் கல்வி வள்ளல்கள் எனும் பெயரோடு உலவிவரும் கல்வி முதலாளிகளை அல்ல! அது இன்றைய நம் சமூகத்தின் முரண்பாடு! அவர்களிலும் நல்லவர் சிலர் விதிவிலக்குகளாக- இருக்கிறார்கள் என்றாலும் நான்சொல்லவந்தது அவர்களையும் அல்ல. கல்லூரிப்படிப்புப் படிக்காத ஆனால் சமகால மனிதர்களைப் படித்த- மேதைகளான எழுத்தாளர்களைச் சொல்கிறேன். 
ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான்கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3ஆம் வகுப்புத் தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துகளை ஆய்வு செய்த படிப்பாளிகள் பலநூறுபேர் முனைவர்” (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?
பட்டம் பெற்ற மனிதர்களுக்கான பணிகளும் பதவிகளும் மாறிமாறி வரும்போகும்பதவிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம்ஆனால்பதவிகளை வகிக்கும் மனிர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”-குறள் இதைத்தானே சொல்கிறதுபதவிகளுக்காகவே வாழும் மனிதர்களைப் பற்றி ஒரு சொலவடை இருக்கிறது-
தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால் ஊரே திரண்டு வருமாம். தாசில்தாரே செத்துப் போனால் ஒரு நாய்கூட வராதாம்!  இது எப்படி இருக்குஎதார்த்தமா இருக்குல்ல?
ஆமாம் அவ்வளவுதான்பதவிக்காலத்தில் ஆடுகிறவர்கள் அதை இழந்ததும்மனத்தளவில் செத்துப் போவது அதனால்தான்! பதவிகளை மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்தவாய்ப்பு என்றுநினைக்கும் இடதுசாரி அரசியல்வாதிகள் மட்டும்தான் முதலமைச்சராக இருந்தால் கூட தோழர்” எனும் ஒரு சொல்லுக்குள் அடங்கி நிற்பார்கள். இடதுசாரித் தலைவர்களை மட்டும்தான் இன்னமும் தா.பா.வர்ராராமில்ல?” ”ஜி.ஆர்.பேசுறாராமில்ல? என்று பெயர்ச்சுருக்கத்தைச் சொல்லிச் சாதாரணத் தொண்டர் அழைப்பதைப் பார்க்கலாம். மற்ற கட்சிகளில் வட்டம்மாவட்டங்களையே பெயர் சொல்லி அழைக்க முடியாது! அவர்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட பெரியவர்களாகி விட்டார்கள் என்று அர்த்தம். அதாவது அவர்கள் மனிதர்களாகவே இல்லை என்பது பொருள்!
சிறந்த சிந்தனையாளரும் நல்ல தமிழறிஞருமான சாலய்.இளந்திரையன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் - 
எழுதிவைத்த புத்தகத்தில் முழுகிப் போவாய்                          
         எதிரிருக்கும்மானுடரைபபடிக்கமாட்டாய்,
 கழுதைகளும் புத்தகத்தை மேயும்பின்னர
      கால்முட்டி இடித்திடவே நடக்கும் தோழா   என்பது,. புத்தகங்களைப் படிக்கத்தான் வேண்டும். அதற்காகப் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை அதை நடைமுறைப்படுத்தமனிதர்களுக்காக அந்தச் சிந்தனைகளைப் பயன்படுத்த வேண்டும்.
முதல்வகுப்பில் சேர்ந்தது முதல், “முதல்மதிப்பெண்“ மயக்கத்தை மண்டையில் ஏற்றிமதிப்பெண் வாங்குவதையே லட்சியமாக நினைக்கவைத்த பாவம் நமது கல்விமுறை தந்த சாபமன்றி வேறென்னஎழுத்துகளை மேய்ந்த அஜீரணத்திற்கு மருந்து தேடிஇவர்கள் தொலைத்தது கருத்துகளை என்பது புரிவதற்குள் படிப்பே முடிந்து விடுகிறதே! நல்ல கவிதை தேமாபுளிமாபண்புத்தொகைவினைத்தொகைகளுடன் இருக்கலாம். ஆனால்இந்த இலக்கணக் குறிப்புகளை அறிந்து மதிப்பெண்பெறும் பதற்றத்தில்அனுபவிக்க மறந்தது உயிர்க் கவிதைகளின் அழகைஆழமான அர்த்த்த்தை என்பதை அறிந்துகொள்வதற்குள் படிப்பே முடிந்துவிட்டதே!
இதைத்தான் நமது மகாகவி பாரதி 
“அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் 
     ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்  என்றான். இதுவும் புரியவில்லை என்றால்குளத்துக்குள் எத்தனை நாள் கிடந்தாலும் தவளை அறிவதில்லை தாமரையின் அழகையும்பயனையும் என்றுதான் சொல்ல வேண்டும்.
டந்த பருவத்தேர்வுகளில் நீ நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும்ஒருபாடத்தில் மட்டும்தான் முதல்மதிப்பெண் எடுக்கமுடிந்தது என்று வருத்தப்பட்டதாக உன்அம்மா கூறினார். அது போதும் மகளே! முதல்மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதற்காக உனது நேரத்தை யெல்லாம் வீணாக்காதே! உனக்கு மட்டுமல்லவழக்குரைஞராக இருக்கும் உன் அக்காவுக்கும்கணினிப் பணியிலிருக்கும் உன் அண்ணனுக்கும் -அவர்கள் படித்தபோது- இதையே சொல்லியிருக்கிறேன்.
பாடப் புத்தகங்களைப் படித்துப்படித்து உருப்போட்டு“, முதல் மதிப்பெண் எடுப்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாகத் தோன்றும். ஆனால்அப்படி முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பின்னால் என்ன சாதித்தார்கள் என்று யோசித்துப் பார்த்துத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த பல பத்தாண்டுகளாக மாநில அளவில் முதல்மதிப்பெண்“ பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் முதல்மதிப்பெண் சாதனைக்காக- பலப்பலப் பரிசுகள் தரப்படுகின்றன. அன்று அவர்கள்தாம் தொலைக்காட்சிகளின் கதாநாயக/நாயகியர்! இனிப்பு ஊட்டுவதென்னதோழர்-தோழியர் தூக்கிவைத்துக் கொண்டாட புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துதொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் கொடுப்பதென்ன?!!! எல்லாம் அந்த ஒரு நாளோடு சரி. அதன் பின் ஏற்றிவைத்த கிரீடத்தை இறக்கி வைக்கவே சிரமப்பட்டுஅடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தச்சாதனைகள் அவர்களுக்கே மறந்துபோய் விடுவதுதானே ஆண்டுதோறும் நடந்துவருகிறது அல்லவா?
நன்றாக யோசித்துப் பார்த்தால்பத்தாம் வகுப்புச் சாதனையின் போது, “பன்னிரண்டாம் வகுப்பிலும் நான் மாநிலமுதன்மை எடுப்பேன்“ என்று வாரிவழங்கும் உறுதிமொழியைப் பெரும்பாலும் அனேகமாக யாருமே- நிறைவேற்றியதாக எனக்கு நினைவில்லை.
இப்போது ஏன் இதைப்பற்றிச் சொல்கிறேனென்றால்கடந்த சிலபல நாள்களாகபள்ளியிறுதி(SSLC),, மற்றும் மேல்நிலை(+2) வகுப்புத் தேர்வுமுடிவுகள் வந்துசெய்தித்தாள்களின் பக்கங்களையெல்லாம் தனியார்பள்ளி கல்லூரிக் கல்விவள்ளல்களின் விளம்பரங்களே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை நீயும் பார்த்திருப்பாய்! மாநில முதன்மை பெற்ற மாணவர்களின் பேட்டிகளால் செய்தித்தாள்கள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இந்த ஆண்டு பத்தாம்வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை வாரிக் குவித்து விட்டார்கள் போ! மாநிலஅளவில் முதல்மதிப்பெண்ணே ஒன்பது பேர்! இரண்டாமிடத்தில் 32பேர் மூன்றாமிடத்திலோ 148பேர்!
இந்த மாணவர்கள் மீண்டும் இதே அளவுக்குச் சாதிக்கா விட்டாலும்நன்றாகவெ படித்துவிரும்பும் உயர்கல்வியை விரும்பும் கல்விநிறுவனத்தில் முடித்துநல்ல தேர்ச்சிகாட்டிமருத்துவராகவோபொறியாளராகவோமாவட்டஆட்சியராகவோகூட வந்துவிடலாம் ஆனால்அந்த மதிப்பெண் சாதனையாளர்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்றால்... பெரும்பாலும் ஏமாற்றம்தான்... ஏனெனில்வாழ்க்கையில் வெற்றி என்பது கைநிறையச் சம்பளம் தரும் நல்ல வேலைக்குப் போவதுநல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வதுகுழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்வதுகார்வாங்குவதுபங்களா கட்டுவது என்று செட்டில்” ஆவதில் இல்லை! அது சுயநலமிக்க வாழ்க்கை. அது நமக்குத் தேவையுமில்லை மகளே!  இதைத்தானே பாரதிதாசன் மண்டையிலடித்தாற்பேலச் சொன்னார்?
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு                                                     
சம்பாத்தியம் இவையுண்டு தானுண் டென்போன்                                                              சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்                                          
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்  - நாட்டின் நல்லகுடிமகனாக,
சிறந்த மனிதராகபுகழ்பெறா விட்டாலும் சாதாரணமாக அடுத்தவர் நினைவில் தோன்றும்போது  (IMAGE) நல்ல மனிதராக வாழ்ந்து காட்டுவதுதான் வாழ்க்கையின் அடையாளம். இதைத்தான் வள்ளுவப் பெரியாரும், “தோன்றின் புகழோடு தோன்றுகஅஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்று சொல்லியிருக்க வேண்டும்.
மதிப்பெண் என்பது அறிவின் அளவீடல்ல,   நமது கல்விமுறையில் எந்த அறிவும் சரியாக அளக்கப்படுவதுமில்லை. அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60மதிப்பெண்ணும்ஓவியம்விளையாட்டுபாட்டுபேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக்கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது. அது இன்னும்மாறி 100மதிப்பெண்ணும் பல்திறனறிவைச் சோதிக்கவே என்றாகும் காலம் வரும். மாணவர்களின் பன்முக ஆற்றல் வெளிப்பட வேண்டும். அதில் தன் தனித்திறமையைக் கண்டறிந்த மாணவர் அதில் கூர்மையேற்றவும் பயிற்சி பெறவேண்டும்.
தேர்வில் தோல்வியடைந்தாலும் போராடி வென்று இந்தச் சமுதாய முரண்பாடுகளைப் புரிந்து கொண்டு சமூக மனிதனாக” நாலுபேருக்கு நன்மை செய்து,சாதாரணமாகவே வாழ்பவன்தான் உண்மையில் வெற்றி பெறுகிறான். 
தேர்வில் வெற்றிபெறுவது முக்கியமாவாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமா என்று கேட்டால்  வாழ்க்கைதான் முக்கியம்” ஆனால்முதல்மதிப்பெண் வெற்றிதானே வாழ்க்கை வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று கேட்டால் பெருவெற்றி பெற்ற பலரின் வாழ்க்கையை மதிப்பெண் தீர்மானிக்கவில்லை என்னும் வரலாற்று உண்மையை நீ புரிந்துகொள்ள வேண்டும். 
தனது பள்ளிப்படிப்பில் மற்ற பாடங்களை விடவும் குறைவாக வரலாற்றுப்பாடத்தில் மதிப்பெண் எடுத்த காந்திதான் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதினார். இன்னொரு பக்கம் தனது கல்லூரிப் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கிய லெனின் அந்தப் படிப்புக்குத் தொடர்பில்லாத அரசியலில்தான் சோவியத்து நாட்டு வரலாற்றை மட்டுமல்லஉலக வரலாற்றையே புதிதாக எழுதிவிட்டார்!
படிப்புக்குப் பிறகு வேலைக்குப் போனாலும் சரி நீயே உன் திறனுக்கேற்ப உன் வாழ்க்கையைத் திட்டமிட்டுக்கொண்டாலும் சரி. எப்படி ஆயினும்கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இந்த உலகத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சிலர்பலரின் சுயநலம்மூடநம்பிக்கைபொறாமை சூழ்ச்சிகளிடையிலும் நமது தனித்தன்மையை விட்டுவிடாமல் வாழ்வதற்கான கல்வியை முடிந்தவரை கற்றுக்கொண்டு வா. சாதாரணமான மதிப்பெண்களோடும்அசாதாரணமான புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வா மகளே! 
அப்புறம் பாடப்புத்தகம் தவிரவும் என்ன புத்தகம் புதிதாகப் படித்தாய் என்றும்மின் உலகில் புதிதாக எனக்கென்ன கற்றுக்கொடுக்கப் போகிறாய் என்றும் எனக்குச் சொல்லு.         
சொல்லுறத சொல்லிப்புட்டேன் செய்யுறத செஞ்சிடுங்க...                        
நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க...                                                
எல்லாம்தான் படிச்சீங்க... என்ன பண்ணிக் கிழிச்சீங்க... 
                                               – பட்டுக்கோட்டையார்  பாடல்
அவ்வளவுதான் மகளே!                                               
அன்புடன்                                                              
உன் அப்பா.           
-----------------------------------------------------------------------------------------------------------------  
(புதிய நண்பர்களின் பார்வைக்காக மறுபகிர்வு)
இப்படியான எனது கல்விச் சிந்தனைகளோடு,
அகரம் பதிப்பகம் வெளியீடாக 2015இல் வந்து
ஒரேஆ ண்டுக்குள் 3000பிரதிகள் விற்று,
மாநில அளவிலான 4விருதுகளையும் வென்ற
நூலின் தலைப்புக் கட்டுரையும் இதுதான்
-----------------------------------------------------
கட்டுரையைப் படித்தவர்கள் தனிப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள
செல்பேசி எண்-94431 93293               
மின்னஞ்சல்-muthunilavanpdk@gmail.com
பொதுவான கருத்துகளைப் பகிர விரும்புவோர் 
இங்கேயே பின்னூட்டமும் இடலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------

13 கருத்துகள்:

  1. // மனிதரைப் படித்தால்தான்
    நாமும் மனிதராகலாம்...//

    இது ஒன்றே போதும் அய்யா...

    பதிலளிநீக்கு
  2. மிக அவசியமான நேரத்தில்
    மிக அவசியமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. இத்தனை நாள் புத்தகங்கள் எனக்கு சொல்லி தராதததை நீங்கள் ஒரு நூலில் சொல்லி விட்டீர்கள் ஐயா.. எதிர்காலம் நம் மதிப்பெண்ணில் அல்ல. புரிதலில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன் ஐயா. இனி நானும் மனிதர்களை படிக்க முயற்சிக்கிறேன் ஐயா. பயனுள்ள நூலை பகிர்ந்ததற்கு நன்றிகள் பல ஐயா.

    பதிலளிநீக்கு
  4. அருமை.. பகிர்ந்தமைக்கு நன்றி. இது பெரியவர்களுக்கும் ஒரு பாடமே... மற்றவரோடு தம்பிள்ளைகளை ஒப்பிட்டு தன்னம்பிக்கை இழக்கச் செய்வோர் எத்தனை பேர்.. இன்று அலுவலகத்தில் 1186 எடுத்த தோழியின் மகளை பார்த்து தன் மகன் 1025 தான் என உற்சாகமிழந்த இன்னொரு தோழியை சற்று கடிந்து கொண்டதும் தான் ஒருநிலைக்கு வந்தார். அவரை என்னச் சொல்வது?

    பதிலளிநீக்கு
  5. அய்யா,
    நம் பிள்ளைகள் படிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களுடைய பொது அறிவு, சமூக அக்கறை இவைகளைக்குறித்து சிறிது சிந்திப்போம். சமீபத்தில் நான் பார்த்த வீடியோ ஒன்று என் மனதை மிகவும் பாதித்தது. அதைப் பகிர நினைத்தேன். நம் நம்பிக்கை நட்சத்திரங்களின் பொது அறிவு சமூக அக்கறை எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்த்து மன வேதனை அடைந்தேன். யாருக்காவது இதைக்குறித்த விழிப்புணர்வோ அல்லது தெரியவில்லை என்கின்ற வெட்கமோ தெரிந்து கொள்ள வேண்டுமோ என்கின்ற ஆர்வமோ இருக்கின்றனவா?? எத்தனை எகத்தாளம், கேலி, கிண்டல்!!!!
    https://www.youtube.com/watch?v=yEXoD7YBYS0

    பதிலளிநீக்கு
  6. இன்றைக்குச் சரியாக மறுபதிவு செய்தது அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  7. ஆம் .உண்மையான இலக்கியம் இது.
    வழிகாட்டல் . அருமை அய்யா.

    பதிலளிநீக்கு
  8. எக்காலத்திற்கும் பொருந்தும் பதிவு. இன்னும் பலர் திருந்தவில்லை என்பதை யோசிக்கும்போது வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. சரியான நாளில் மறு பகிர்வு.. மீண்டும் ஒரு முறை படித்தேன் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மிக மிக அருமையான பதிவு. கருத்துகள் ஒவ்வொன்றும் ஆழமாகப் பதியப்பட வேண்டியய்வை. எங்களில் துளசி ஆசிரியர். கீதாவிற்குக் கல்விச் சிந்தனைகள் உண்டு. எங்கள் இருவரின் கருத்துகளின் பிரதிபலிப்பாக உணர்கின்றோம்.

    இந்தக் கருத்துகள் ஆண்டாண்டு காலத்திற்கும் பொருந்தும். யுனிவேர்சல் என்றும் சொல்லலாம். அனைத்துப் பெற்றோரும் உணர வேண்டும் நம் சமூகம் உட்பட. நம் கல்வி முறை மாற வேண்டும் இதைப் போல். அருமை அருமை...

    பதிலளிநீக்கு
  11. பயனுள்ள பதிவு ஐயா.தங்களின் இந்நூல் முழுவதையும் படித்தேன் அறியாத சிலவற்றை தெளிவாக அறிந்தேன்.இன்றைய கல்வி முறை குறித்து தங்களின் எழுத்துகள் என்னை கவர்ந்தது ஐயா.தமிழ் மொழி கல்வி குறித்து தங்களை கேள்விகளே எனது கேள்வியும் ஐயா.நான் இந்நூலில் தெரிந்துக் கொண்ட பலவற்றை எனது தோழிகளிடம் பகிர்ந்துக் கொண்டேன்.இப்பொழுது இந்நூல் எங்கள் கல்லூரியில் நடைபெற்று வரும் வாசகர் வட்டத்தில் உள்ள மாணவிகளிடம் வாசிப்புக்கு வலம் வந்துக் கொண்டிருக்கிறது.பயனுள்ள கருத்துகள்,கேள்விகள் சில இடங்களில் சிந்திக்க வைத்தது ஐயா.இன்றைய சூழலில் குழந்தைகளின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் பெற்றோர்கள்.நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. மீண்டும் ஒரு முறை படித்தேன். காலத்திற்கேற்ற மறுபதிவு. அனைவரும் வாசிக்கவேண்டிய பதிவு. மதிப்பெண்ணை மட்டுமே வைத்துக் குழந்தைகளின் அறிவுத்திறனைக் கணக்கிடும் முறை கண்டிப்பாக மாற வேண்டும். 3000 பிரதிகள் விற்றமைக்கும் நான்கு விருதுகள் பெற்றமைக்கும் பாராட்டுக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு