அவசரச் செய்திகள் சிலவற்றில் ஒன்று..

நாய்க்கு வேலை இல்லயாம்.. உக்கார நேரமில்லையாம் என்னும் பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.
ஓடிக்கொண்டே திரிவதில் எத்தனை இழப்புகள்!

சரி.
எங்கள் இனிய வைகறையின் 
எதிர்பாராத
மறைவைப்பற்றி 
எழுதவேண்டும்...
எப்படி எழுதப்போகிறேன் என்று தெரியவில்லை...
---------------------
இன்று காலைதான் சென்னையிலிருந்து வந்தேன்..
அவசரச் செய்திக்காக இந்த அவசரப் பதிவு...

இன்று (24-04-2016) ஞாயிற்றுக்கிழமை,
மாலை 6மணி முதல் 6.30மணிவரை, 
டி.டி.பொதிகைத் தொலைக்காட்சியில்,
அண்மையில் நாகையில் நடந்த 
இந்து-தமிழ் நாளிதழின்
கல்லூரி மாணவர்க்கான
 “வாக்காளர் வாய்ஸ்” நிகழ்ச்சி 
ஒளிபரப்பாகிறது.

அரைமணி நேர நிகழ்ச்சியில் 
நான் பேசியதும் வருகிறது... 

நேரமிருப்பவர் பாருங்கள், 
அதோடு,
வாய்ப்பிருப்பவர் 
எனது பேச்சைப் பதிவு செய்து 
இணைப்பைத் தாருங்கள்.
இந்தப் பதிவிலேயே பின்னர் இணைத்து விடுவோம்.
(எனக்குத் தெரியாததால் இந்த வேண்டுகோள்)
பி.கு.-
நண்பர்கள் மன்னிக்க- ஏதோ நினைவில்
அரைமணிநேரம் முன்னர் இந்தப்பதிவை ஏற்றும்போது,
இன்று -22-04-2016 வெள்ளிக்கிழமை என்று குறிப்பிட்டு விட்டேன்.. இப்போது திருத்திவிட்டேன்

5 கருத்துகள்:

  1. பொதிகை தொலைக்காட்சியா...
    பார்க்கலாம் நண்பரே....
    டீவி லலாம் வரீங்க வாழ்த்துகள் ....

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள்! வைகறை அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. வைகறையின் மறைவு இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை அதற்குள் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையும் எழுத்தாளர் பாஹே அவர்களின் மறைவு..என்று வலையுலகம் கொஞ்சம் வருத்தங்களில்...

    பார்க்க முயற்சி செய்கின்றேன் அண்ணா...எப்படிப் பதிவு செய்வது என்று பார்க்கின்றேன். முடிந்தால் பதிவு செய்து அனுப்புகின்றேன் அண்ணா..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இணைப்பு வ(த)ந்ததும் பார்க்கிறேன் சார்!!!

    பதிலளிநீக்கு
  5. யூடிப்பில் வந்தால்தான் இங்கு பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு