தமுஎகச 2014-கலை-இலக்கிய விருதுகளுக்கான முடிவுகள் அறிவிப்பு


கடந்த 2014 ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய ஆவணப்பட விருதுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுபற்றி நம் வலைப்பக்கத்தில் வந்த அறிவிப்புக் காண –
http://valarumkavithai.blogspot.com/2015/06/blog-post_9.html  

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

த மு எ க ச சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள்,சிறுகதை,நாவல்கள் உள்ளிட்ட கலை இலக்கிய படைப்புகளுக்கான விருதுகளை வழங்கிவருகிறோம்.அதன் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டில் வெளியான படைப்புகளுக்கு விருதுகள் வழங்க நடுவர்குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் விருதுக்கான படைப்புகளை தேர்வுசெய்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
(1)  நாவல்
அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது
நூல் : மீசை என்பது வெறும் மயிர்
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா

(2)  சிறுகதைத் தொகுப்பு
அகிலா சேதுராமன் நினைவு விருது
நூல்: கூனல்பிறை   ஆசிரியர்: தேன்மொழி
(3)  சிறந்த கவிதைத் தொகுப்பு
வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்-செல்லம்மாள்
ப.ஜெகந்நாதன் நினைவு விருது
நூல்: அழிபசி    ஆசிரியர்: தவசி கருப்பசாமி

(4)  விளிம்புநிலை மக்கள் பற்றிய சிறந்த படைப்பு
அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது
நூல்: சப்பே கொகாலு
ஆசிரியர்: லட்சுமணன்

(5)  சிறந்த தொன்மம்சார் படைப்பு
தோழர் கே.முத்தையா நினைவு விருது
நூல்: இலக்கியத்தில் மானுடவியல்
ஆசிரியர்: பக்தவச்சல பாரதி

(6)  சிறந்த கலை இலக்கிய விமர்சன நூல்
தோழர் இரா.நாகசுந்தரம் நினைவு விருது
நூல்: பாரதியியல்- வெளிவராத உண்மைகள்
ஆசிரியர்: முனைவர் ய.மணிகண்டன்
(7)  சிறந்த மொழிபெயர்ப்பு நூல்
வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா
டி.டி.ராமகிருஷ்ணன் தமிழில்/ குறிஞ்சிவேலன்

(8)  சிறந்த ஆவணப்படம்
என்.பி.நல்லசிவம்-ரத்தினம் நினைவு விருது
படம்: பாட்டாளி படைப்பாளியான வரலாறு
இயக்கம்: சாரோன் செந்தில்

தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள்
(9)  வளர்ச்சிக்கு உதவும் சிறந்த நூல்
நூல் : தொல்காப்பியத்தில் இசை : தொன்மையும் தொடர்ச்சியும்
ஆசிரியர்: முனைவர்.இராச.கலைவாணி

(10)               சிறந்த குழந்தைகள் இலக்கிய நூல்
நூல்: ஜிமாவின் கைப்பேசி
ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
இவ்விருதுகளைப் பெறும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும்
ரூ.5,000 ரொக்கத்தொகையுடன் வாழ்த்துக் கேடயங்களும் திரளான மக்கள் கலந்துகொள்ளும் தஞ்சை விழாவில் வழங்கப்படவுள்ளன.
விருதுகள் வழங்கும் விழா இம்மாதம் செப்டம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறுகிறது. (அழைப்பிதழ் மேலுள்ளது வருக வருக!)

------------------------------------------------------------ 

6 கருத்துகள்:

  1. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  2. விருதுபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
    பகிர்விற்கு நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  3. விருது பெற்ற இலக்கிய ஆளுமைகளுக்கு வாழ்த்துகள்
    தம +

    பதிலளிநீக்கு
  4. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  5. அனைத்து ஆளுமைகளுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு