வெளிநாடுவாழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...


வரும் 11-10-2015 அன்று “வலைப்பதிவர் திருவிழா-2015” புதுக்கோட்டையில் நிகழவிருப்பதை அறிந்திருப்பீர்கள்!
வருவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறீர்கள், சிலர் பயண முன்பதிவு செய்துவிட்டதாகச் சொன்னது மகிழ்ச்சி!

“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தமது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுப்படிவத்தை இதுவரை 50பேர் நிரப்பியிருப்பதாக அறிந்து மகிழ்கிறோம்.

இன்னும் பதிவுகள் தொடர்கின்றன... நீங்கள் இதுவரை படிவம் நிரப்பாமல் இருந்தால் உடன் நிரப்பிவிட வேண்டுகிறேன். ஒருவேளை கடைசிநேரத்தில் வரஇயலாமல் போனாலும் பரவாயில்லை, விவரம் கிடைக்க வேண்டுமல்லவா?

வலைப்பதிவர் கையேடு
இம்முறை ஒரு புதிய முயற்சி எடுக்கிறோம் – 
உலகம் முழுவதும் உள்ள தமிழ் வலைப்பதிவரை அறிந்து கொள்ள உதவும் “தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015“ 

இதற்கு, வருவோர் வரஇயலாதோர் அனைவருமே தத்தம் சுயவிவரம் தருவதால் சரியான –இன்றைய- தகவல்களுடன் அனைவருமறிய ஒரு கையேடு கிடைக்கும் என்பதால் பதிவர்-படிவம் முக்கியத்துவம் பெறும்  முக்கியமாக வெளிநாடு வாழ் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தம் விவரங்களை –அவர்கள் விரும்பினால் தமிழ்நாட்டில் தொடர்புகொள்ளும் முகவரியுடன்- தரலாம்.இதற்கென விழாக்குழுவில் ஒரு குழுவினர் தனியே சுறுசுறுப்பாகச் செயல்பட்டு விவரங்களைச் சேகரித்து வருகிறார்கள்.

இதில் ஒரு வேண்டுகோளும் கூட..
15-9-2015 வரை வரும் விவரங்களைக் கொண்டே இக்கையேடு தயாரிக்கப் படவுள்ளது. பக்க அளவு அப்போதுதான் இறுதியாகும். அச்சிடும் செலவும் அப்போதே முடிவாகும். இதனை விழாவுக்கு வரும் அனைவர்க்கும் இலவசமாகவே தருவதென்றும், அச்சிடும் செலவை ஈடுகட்ட சில பக்கங்களில் விளம்பரம் வெளியிடலாம் என்றும் விழாக்குழு முடிவெடுத்துள்ளது. எனவே, வாய்ப்புள்ள நண்பர்கள் கடைசிப் பக்கம் மற்றும் உள் அட்டைகள் இரண்டு ஆக 3வண்ணப் பக்கங்களில் இடம்பெறும் விளம்பரங்களைப் பெற்றுத் தந்துதவலாம். உள்பக்கங்களில் ஒரு வண்ணம் மட்டுமே 

வெளிநாடுகளில் இயங்கிவரும் தமிழ்அமைப்புகள் தமிழ்ச் சங்கங்கள்- உதவும் தமிழர்களை அணுகி இதற்கு உதவிசெய்ய வேண்டுகிறோம். இது பற்றிய செய்தி விவரங்களைப் பொதுவில் வைக்க வேண்டாம் என்பதால் தனியே மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

முக்கியமாக,வெளிநாடுவாழ் தமிழ்வலைப்பதிவர்கள் தமது நிதிஉதவி, 
விளம்பர உதவியுடன்– 
வரஇயலாதவர்–தமது வாழ்த்துரையை, கவிதையை 10,15வரிக்குள் தெரிவித்தால் அதை விழா அரங்கில் அழகாக எழுதி வைக்க விரும்புகிறோம். கவிதையாகவோ வாழ்த்துரையாகவோ தருக!

நேரில்வருவோர் தரும் சுய-அறிமுகத்தை அப்படி அப்படியே நேரலையில் தரவிருப்பதாலும், விழாவில் வெளியிடவுள்ள வலைப்பதிவர் கையேட்டில் அச்சிட்டுத் தரவிருப்பதாலும் தனியே தரவேண்டியதில்லை. (கூகுள் படிவத்தில் பதிவு செய்தல் போதும்)
அப்படியே தங்கள் நல்வரவு(உடன்), 
நல்“வரவும்“ ஆகுக!

அனைத்துத் தொடர்புகளுக்கும் -

bloggersmeet2015@gmail.com
------------------------------------------------------------- 
விழாவுக்கான 
பிரத்தியேக வலைப்பதிவு காண வருக
http://bloggersmeet2015.blogspot.in/ 

10 கருத்துகள்:

  1. விளக்கமான வேண்டுகோள்! அனைவரும் விரைந்து அனுப்பி உதவுக!

    பதிலளிநீக்கு
  2. கையேடு தயாரிக்கும் முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.கையேட்டை மின் நூலாகவும் வெளியிட்டுவிடலாம் .
    படிவம் நிரப்பி சமர்ப்பித்து விட்டேன்.ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அலுவலகம் செல்லவேண்டி இருந்ததால் வலைப் பக்கம் அதிகம் வர முடியவில்லை. விரைவில் எனது வலைப் பக்கத்திலும் விழாபற்றி ஒரு தனி பதிவிட இருக்கிறேன். தங்களுடைய ஆர்வமும் விழா ஏற்பாடுகளும் பிரமிக்க வைக்கின்றன ஐயா!

    பதிலளிநீக்கு
  3. மிகச் சிறப்பாக செயல்படுத்துகிறீர்கள் ஐயா...
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.
    அலுவலகத்தில் கூடுதல் பணி + புதிய புராஜெக்ட் என்பதோடு மட்டுமில்லாமல் விசா பதினோராவது மாத ஆரம்பத்தில் முடிவது என கொஞ்சம் இக்கட்டான சூழல்.
    வர ஆசைதான்... ஆனால் சூழலுக்குள் கைதியாய்...
    பார்க்கலாம்.. கலந்து கொள்ள வேண்டுமென்றிருந்தால் கண்டிப்பாக வருவேன்.

    பதிலளிநீக்கு
  4. விழாவுக்கு வருவதில் சிரமங்கள் இருப்பதால் வருவது கடினம்தான்! விழா நாள், முந்தின நாள், மறுநாள் மூன்று நாட்களும் என்னுடைய கோவில் பணி அதிகம் இருக்கிறது. மாற்று ஏற்பாடுகளுக்கு முயல்கிறேன்! படிவம் நிரப்பிவிடுகிறேன்! வருபவர்கள் மட்டும் நிரப்ப வேண்டுமோ என்று இதுவரை நிரப்பவில்லை! மிகுந்த ஆவலாக இருந்தும் என் பணி சூழல் காரணமாக ஏமாற்றமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமையான யோசனை. வாழ்த்துக்கள் அய்யா! மிக்க ஆவலாய் உள்ளேன்!
    த ம 3

    பதிலளிநீக்கு
  7. விழா ஏற்பாடுகள் வெகு சிறப்பாக சென்று கொண்டிருப்பதை அறிகின்றோம்...சிறப்பித்துவிடுவோம்..ஐயா! .வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. விழா சிறக்கட்டும்! அன்புட ன் எம்ஜிஆர்

    பதிலளிநீக்கு