வாட்ஸப் படங்கள் - வசனப் போட்டி!



வாட்ஸப் படங்கள் - வசனப்போட்டி!
டும்... டும்... டும்...
இதனால் சகலமானவர்க்கும் தெரிவிப்பது என்னவென்றால்...


சிறந்த வசனம் எழுதுவோர்க்குத் 
பரிசு ஏதும் கிடையாதுங்கோ...!

(ஆனா நண்பர்களின் 
பின்னூட்டப் பாராட்டு
நிச்சயம் உண்டுங்க 
பரிசு கொடுத்து
அந்த மதிப்பக் குறைச்சுடக் கூடாதில்ல... 
எப்புடீ?)

பட எண் குறிப்பிட்டு  வசனம் எழுதுங்க.

வசனம் நகைச்சுவையுடனும் 
“நச்”கருத்துடனும் இருக்கட்டும்ங்க..
(படங்களில் ஏற்கெனவே இருக்கும் 
வசனங்களை விட நல்லா இருக்கணும்)
----------------------------------

(1)

-----------------------------------------------------------------

(2)

 -----------------------------------------------------------------

(3)


----------------------------

(4)


--------------------------------------------------------------------

(5)


-----------------------------------------------------------------------

(6)


------------------------------------------------------------------------------

(7)
------------------------------------------------
(நாம பாரதி மாதிரிங்க... அதாவது கணக்குக்கும் நமக்கும் ஏழாம்பொருத்தம்..! அதான் ஏழாவது படத்தை விட்டுட்டேன். விடாம ஞாபகப்படுத்தின மைதிலித்தங்கைக்கு நன்றி)
---------------------------------------------------------- 

(8)


--------------------------------------------------------------------------------
(9)

-------------------------------- 

(10)

-----------------------------------------------------------------------------

மேற்கண்ட 10படங்களுக்கு 
(அல்லது, தான் விரும்பியவற்றுக்கு மட்டும்)
வசனம்  எழுதப் போறவங்க 
இதையும் படிச்சுட்டுப் போங்க
----------------------------------------------------------------------- 
“மேகி” எதிர்ஒலி !
மேகி செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

இடியாப்பம் செய்து விடல்.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

மேகியைச் சமைத்த வர்க்கு.


விற்க கசடான மேகியை விற்றபின்

நிற்க கோர்ட்டில் அதற்குத்தக.


அன்பிலார் எல்லாம் மேகி தின்பர் அன்புடையார்

என்றும் தின்பார் இட்லி அவித்து.


எப்பொருள் பற்றி எந்நடிகர் வாய்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.


(குறள்கள்-  Teachers Society Group -  புதுக்கோட்டை)

சென்னையில் 3நாள் கல்வி, கலை விழா! ஆர்வலர் வருக!

சென்னையில் 3நாள்
கல்வி, கலை விழா!
ஆர்வலர் வருக!
நானும் பங்கேற்கிறேன், நண்பர்கள் வருக!
------------------------------------------
களம் - சென்னை அண்ணாநகர் SBOA பள்ளி
காலம் - ஜூன் 19,20,21 - 2015 (வெள்ளி சனி ஞாயிறு)
------------------------------------------
மூன்றுநாள் நிகழ்ச்சிநிரல்

நிகழ்ச்சிக்கு வரஇயலாத ஆர்வலர்கள் 

நேரலையில் காண -



19-06-2915 வெள்ளிக்கிழமை, முதல்நாள் நிகழ்ச்சிகள் 


20-06-2915 சனிக்கிழமை, இரண்டாம்நாள் நிகழ்ச்சிகள் 


21-06-2915 ஞாயிற்றுக்கிழமை, மூன்றாம்நாள் நிகழ்ச்சிகள் 

---------------------------------------------------------------------------- 

எஸ்.பி... கல்வி, கலை, சூழல் விழா-2015
தமிழ் அமர்வுகள்
இந்திரா காந்தி அரங்கம்
நாள்: 1 19/06/2015

19/06/2015 - 11.30 -1.00

உயிரியல் பன்மயம்
நெறியாளர்
திரு.பாரதி கிருஷ்ண குமார்
இயக்குநர்.எழுத்தாளர்

வரவேண்டும் இறகு சிறக்கும் காலம்
திரு.ஓசை காளிதாஸ்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்,

எல்லாம் வாழ உலகம் வாழும்
கோவை.சதாசிவம்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

அழிந்து வரும் கானுயிர்கள்
செல்வன்.இர.ஆதித்யா
பள்ளி மாணவர்
----------------------------------
19/06/2015 - 2.00 -3.30
சமுதாயமும் பாலினப் பாகுபாடும்:
நெறியாளர்
திரு.ஞாநி
படைப்பாளி, பத்திரிகையாளர்.

நீ + நான் = சமுதாயம்
திருமிகு.பிரியாபாபு
சமுதாய செயற்பாட்டாளர்

சரிபாதி பெற்றனரா சரிபாதி
திருமிகு.கவின்மலர்
எழுத்தாளர், பத்திரிகையாளர்.

பால் பாகுபாடு பள்ளியில், வீட்டில்
செல்வி.டி.நிராலி
பள்ளி மாணவி
--------------------

19/06/2015 3.45 -5.15
 கல்வியும் மதிப்பீடும்
நெறியாளர்-
திரு.எஸ்.சுந்தரராமன்
ஆசிரியர் ,பேச்சாளர்.

மதிப்பும் மதிப்பெண்ணும்
திரு.சு.சீ.ராஜகோபாலன்,
கல்வியாளர்,எழுத்தாளர்

விழுமம் துடைக்கும் விழுமிய கல்வி
டாக்டர்..பலராமன்
துணைப்பேராசிரியர்

அறிவுக்கு அளவுகோல்
செல்வன்.அஷ்வத் ராம்குமார்
பள்ளி மாணவர்
-----------------------------------------------------
நாள்: 2 20/06/2015 சனிக்கிழமை

20/06/2015 9.30- 11.00
ஊடகமும் பாலினப் பாகுபாடும்:
நெறியாளர்
திரு.அருள் பிரகாஷ்
ஆசிரியர்,பேச்சாளர்.

ஊடகங்களில் பெண் சித்திரிப்பு
கவிஞர்.திருமதி.சல்மா
எழுத்தாளர்

பெண்ணே நீ பேதையல்ல மேதை
திருமிகு.சுமதிஸ்ரீ
எழுத்தாளர்,பேச்சாளர்

நிமிர்வது திமிரல்ல
செல்வி.கி.நந்தினி
முன்னாள் மாணவி
-----------------------

20/06/2015 11.30 -1.00
கல்வியும் சமுதாயமும்:
நெறியாளர்-
திரு.நா.முத்துநிலவன்
கவிஞர்,கல்வியாளர்

கல்வி பொதுச்சொத்து
பேரா..மாடசாமி
கல்வியாளர்,எழுத்தாளர்

வகுப்பறை ஜனநாயகம்
திரு.ஆயிஷா நடராசன்
கல்வியாளர்,எழுத்தாளர்

நூல்கள்-சுமையும் சுவையும்
செல்வன்.மு.பவித்ரன்
முன்னாள் மாணவர்
---------------------------

20/06/2015 2.00 -3.30
உணவு: அமுதா? நஞ்சா? நம் உணவு
நெறியாளர் திரு.கோ.சுந்தரராஜன்
செயற்பாட்டாளர் – பூவுலகின் நண்பர்கள்

திரு.கவிஞர் .பாமயன்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

இறைதேடு இரைதேடு
மருத்துவர்.கு.சிவராமன்
செயற்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள்

நம் உணவு நம் கலாச்சாரம்
செல்வி .லெஷ்மி சுந்தர்
பள்ளி மாணவி
------------------------------------------------------------
நாள்: 3 21/06/2015 ஞாயிறு

21/06/2015 9.30- 11.00
குடும்பமும் பாலினப் பாகுபாடும்:
நெறியாளர்-
திரு.நக.சுகுமாறன்
கல்வியாளர், முதல்வர் [ஓய்வு]

எதிர்ப்பால் துயருறும் எதிர் பால்
திரு ச.தமிழ்ச்நசல்வன்
தலைவர்,தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

ஆண்களும் பெண்களும்
மா.பத்மாவதி
சமுதாய செயற்பாட்டாளர்.

பொன்விலங்கும் தங்கக் கூண்டும்
செல்வி.வி.வி.மோனிஷா
முன்னாள் மாணவி
--------------------------------
21/06/2015 11.30 -1.00
சுற்றுச்சூழலியல் தண்ணீர்:
நெறியாளர்-
திரு.நக.முருகன்
வழக்கறிஞர்,நபச்சாளர்

நீரின்றி அமையாது உலகு
திரு.நக்கீரன்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

வான் நோக்கி வாழும் உலகு
திரு.மு.வெற்றிச்செல்வன்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

முந்நீரில் நாம் குடிப்பது எந்நீர்?
செல்வி.ராக சுப்ரஜா
பள்ளி மாணவி
-------------------------------------------------------
21/06/2015 2.00 -3.30
கல்வியும் கலாச்சாரமும்:
நெறியாளர்-
திரு.பாரதிதம்பி.
எழுத்தாளர்,
பத்திரிகையாளர்

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிடில்
திரு.எஸ்.இராமகிருஷ்ணன்
எழுத்தாளர்

கற்றதனால் ஆயபயன்
கவிஞர்.நா.முத்துநிலவன்
கல்வியாளர்

பண்பின் வழியது உயிர்நிலை
பிரதியுஷ்.வி.மூர்த்தி
பள்ளி மாணவர்
------------------------------------------------------  
குழந்தைகள், ஆசிரியர் பெற்றோருக்கான 
குறும்படங்கள், நாடக நிகழ்வுகள் நடைபெறும்