பாரதிக்கு இலக்கணம் தெரியாதா?! - தினமணியில் வைரமுத்து !

பாரதி பாரதிதாசனை இப்படியா ஒப்பிடுவது?

பாரதியைப் பெரிதும் விரும்புவோர் பாரதிதாசனைத் தாழ்த்துவதும், பாரதிதாசனைப் பெரிதும் விரும்புவோர் பாரதியைத் தாழ்த்துவதுமான போக்கு, தமிழ்நாட்டில் வெகுநாளாகவே நடக்கிறது.

இருபெரும் ஆளுமைகளான இருவரையும் ஒப்பிட்டு சுயதிருப்தி கொள்ளும் இந்த வேண்டாத வேலையைப் பலரும் பலகாலம் செய்து வந்தாலும் இன்றைய (29-04-2015) தினமணியில் –பாரதிதாசனின் பிறந்தநாளில்- வைரமுத்து செய்திருப்பது பெரிய தவறு!

எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள்

எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள்


எழுதுவது முக்கியம்தான். எழுதும் படைப்புகள், முடிந்தவரை எல்லாருடைய பார்வையிலும் படும்படிச் செய்வதும் முக்கியமல்லவா? அதற்கு, கணினி வலைப்பக்கமோ, அச்சு ஊடகங்களோ, காட்சி ஊடகங்களோ, மேடைப் பேச்சோ, வெளியிடும் புத்தகமோ, வாய்ப்புக் கிடைக்கும் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும் அல்லவா?

நான் இப்படித்தான் செய்கிறேன்.

வலையில் எழுதுவது, முடியுமெனில், அதற்குமுன்னோ பின்னோ தினசரி-வார-மாத இதழ்களில் அவை வெளிவருமாறு –நேரமறிந்து- அனுப்புவது, அழைக்கும் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவது, அதுபற்றிய செய்திகளை வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்வது, பின்னர் அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடுவது.

வலையில் எழுதுவோர் இன்னும் பரவலாக அறியப்பட, படிக்கவும் படைக்கவும், இணையவழி அனுப்பவும் வேண்டிய சில முக்கியமான தமிழ் இணைய இதழ்கள் பற்றிய அறிமுகம் இது

தொல்காப்பியருக்கு நோபல் பரிசு!

தொல்காப்பியர் பெற்றிருக்க வேண்டிய நோபல் பரிசு!
(எனக்குப் பிடித்த கவிதைகள் 5 / 100)


என்னது? 
தொல்காப்பியருக்கு நோபல் பரிசா? 
அது எப்படி சாத்தியம்? 
2500 ஆண்டுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் காலத்தில் 
ஏதய்யா நோபல் பரிசு? அப்படீங்கறீங்களா?

ஆமா.. அதனாலதான் அவருக்கு நோபல்பரிசு கிடைக்கல ங்கிறேன்!

படம்பார்த்து ஏதாவது சொல்லுங்கள்

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு!  
- மிஞ்சும்
அஞ்சும்கூட இருக்குமின்னா 
அதுவும்கூட   டவுட்டு!
--என்று எழுதியவர்--
மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை 
கல்யாணசுந்தரம்!
(1)

(2)

புதுயுகம் டி.வி.யில் ஏன் இந்த அசிங்கம்?

புதுயுகம்  டி.வி.யில்
ஏன் இந்த  அசிங்கம்?
(21-04-2015 மாலை 5.30மணியளவில்
புதுயுகம் டி.வி.யில் நடந்த நிகழ்ச்சி)
பெயரோ புதுயுகம்! நிகழ்ச்சியோ குழந்தைகளுக்கானது! ஆனால் “குட்டீஸ் கொண்டாட்டம்“ எனும் இந்த நிகழ்ச்சியில் நடப்பதோ அரதப்பழசான அசிங்க ஆட்டம்! 
ஏன் இந்தக் கொடுமை?

விளக்கை விசாரிக்கும் இருட்டுகள்!

விளக்கை விசாரிக்கும் இருட்டுகள்!

தமிழ்நாடு முழுவதும் 3லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நேற்று நடந்திருக்கிறது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடந்தில்லை. மாவட்டந்தோறும் அலையலையாகப் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கில் பங்கேற்பு.

எங்கள் பட்டிமன்ற ஒளிப்பதிவு நன்றி-யூ-ட்யூப்


கடந்த 14-04-2015 அன்று 
காலை 9.00-10.30மணிக்கு 
கலைஞர் தொலைக்காட்சி 
ஒளிபரப்பிய எங்கள் பட்டிமன்றத்தைக் காண 
அனைவரையும் 
அன்புடன் அழைக்கிறேன்.

கவிஞர் வைரமுத்துவின் சிங்கைப் பேச்சு! (ஒளிப்பதிவு)


சிங்கப்பூரில் செயல்படும் பட்டுக்கோட்டையார் இலக்கியப் பேரவை நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து அவர்கள் பேசிய உணர்ச்சிகரமான பேச்சை மிகவும் ரசித்தேன். 

பார்க்கச் சொடுக்குக - 
http://www.pattukkottaiyar.com/site/?p=985  

பட்டுக்கோட்டையாரின் முதல்திரைப்பாடல் பதிவு (பாசவலை) பற்றியும், வைரமுத்துவின் முதல்பாடல்பதிவு (தண்ணீர் தண்ணீர்)பற்றியும் பல நல்ல செய்திகளுடன் கவிஞரின் பேச்சு, 72நிமிட ஒளிப்பதிவு இது. 

கவிஞர் வைரமுத்து சென்றுவந்த பட்டுக்கோட்டையார் நிகழ்வுக்கு அடுத்த ஆண்டு, நாங்கள் போயிருந்தோம்.. 
நமக்குத்தான் இதுபோலும் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும் ஞானம் கிடையாதே!அவர்கள் வைத்திருந்தால்தான் உண்டு!
சரி.. வைரமுத்துவின் பேச்சைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
அதுமட்டுமல்ல, 
பட்டுக்கோட்டையார் பற்றிய அதிகாரபூர்வ இணையதளத்தின் இணைப்பு இது.
மங்காப் புகழ்பெற்ற அந்த மக்கள் கவிஞரின் மகன் நடத்துகிறார்... பாருங்கள்...
பட்டுக்கோட்டையார் புகழ் ஓங்குக!
------------------------------------------------------ 

பட்டுக்கோட்டைக்கு ஒரு எளிய கவிதைப் பொன்னாடை!

பட்டுக்கோட்டைக்கு 
ஒரு எளிய 
கவிதைப் பொன்னாடை!
எழுதியவர் 
கவிஞர் தங்கம் மூர்த்தி
அதுவரை
திரைப்படப் பாடல்கள் அணிந்திருந்த
ஆடம்பர ஆபரணங்களை அகற்றினான்.
பகட்டில்லாத
பருத்திப் புடவையை
அணிவித்து அழகுபார்த்தான்

திரையுலகில் எல்லோரும்
அவரவர் உயர்வை நினைத்தே 
எழுதியபோது
இவன்மட்டுமே
வியர்வை நனைத்து எழுதினான்.

“இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை“ எழுதியவர் யார்? எனக்குப் பிடித்த கவிதைகள் – 4/100

“இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை“ எழுதியவர் யார்? எனக்குப் பிடித்த கவிதைகள் 4/100

எழுதியவர் பெயர் தெரியாமலே, பிரபலமாக விளங்கும் கவிதைகள் தமிழில் பலவுண்டு!

நிறைவான மகிழ்வு எப்போது?

“பரிட்சையில பிட் அடிச்சி
பசங்க பிடிபட்டது பழசு!
வாட்ஸ்-அப்ல கொஸ்டின அனுப்பி
வாத்தியாருக பிடிபடுறது புதுசு!!”
-இது, ஏப்ரல்-14 (சித்திரை-1) காலை 9மணிக்கு
கலைஞர் தொலைக்காட்சியில் 
ஒளிபரப்பாகவுள்ள 
பட்டிமன்றத்தில் 
நான் பேசியதன் ஒரு தெறிப்பு..

-பட்டிமன்ற ஒளிப்பதிவின் நிழற்பதிவு-

வழக்கம்போல,
நடுவர் முன்னுரைக்குப் பின்,
பட்டிமன்றத்தின் 
முதல் பேச்சாளராக
நான் பேசியிருக்கிறேன்.
-தலைப்பு-
நிறைவான மகிழ்வைத் தருவது
வாழ்ந்த பழமையா?   
வரும் புதுமையா?
-நடுவர்-
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி
வாழ்ந்த பழமையே!
புதுக்கோட்டைநா.முத்துநிலவன்,
விழுப்புரம்  வல்லபராசு
சுல்தானா பர்வீன் நெல்லை
---------------- 
வரும் புதுமையே!
சென்னை விஜயகுமார்
கோவை தனபால்,
லின்சி ஃப்ளோரா கோவை
------------------ 
முழுமையாகப் பார்த்துவிட்டு 
கருத்துச் சொல்லுமாறு
நண்பர்களை 
அன்புடன் அழைக்கிறேன்.
---------------- - - --------------- 

முனைவர் வா.நேரு அவர்களுக்கு நன்றியும், சிலகேள்விகளும்

கலைஞர் தொலைக்காட்சியின்
விடியலே வாசிறப்பு விருந்தினர் பகுதியில், 
06-04-2015 திங்கள் காலை 8மணிமுதல் 8.30மணிவரை ஒளிபரப்பான எனது நேர்காணல் நிகழ்ச்சியைப் பார்த்து, அதுபற்றிய கருத்துகளையும் தனது வலைப்பக்கத்தில் விமர்சனத்தோடு வெளியிட்டிருக்கும் 
மதுரை முனைவர் திரு. வா.நேரு
(பொதுச்செயலர், பகுத்தறிவாளர் கழகம்
அவர்களுக்கு எனது நன்றியும் வணக்கமும்.
Dr.Vaa.Neru, Madurai

(அவருக்கான எனது கேள்விகள் இப்பதிவின் இறுதியில்) 
-------------------------------
இனி அவரது எழுத்தில்

சிறுகதைச் சிகரம் ஜெயகாந்தன் காலமானார்...

ஜெயகாந்தன் (24-04-1934 - 08-04-2015)
(1)   137கதைகளைக் கொண்ட 15சிறுகதைத் தொகுப்புகள், 35குறுநாவல்கள், 14நாவல்கள், 22கட்டுரைத் தொகுப்புகள் சில மொழிபெயர்ப்புகள், ஒரு நாடகம் –இவை தமிழுக்கு அவரே சொல்லிக்கொண்டது போல- மாஸ்டர் பீஸ் படைப்புகள்..
(2)   தமிழ் எழுத்தாளர்களைத் தலைநிமிரச் செய்த எழுத்தாளர்-

தொலைக்காட்சியில் எனது நேர்காணல்– பார்க்க வேண்டுகிறேன்


கலைஞர் தொலைக்காட்சியில்
எனது நேர்காணலில் ஸ்ரீவித்யா
கலைஞர் தொலைக்காட்சியின், 
“விடியலே வா“ காலைநிகழ்ச்சியில், 
சிறப்பு விருந்தினர் பகுதியில்...

எனது அரைமணி நேர நேர்காணல் 
06-04-2015-திங்கள்கிழமை 
காலை 8.00மணி முதல் 8.30வரை ஒளிபரப்பாகிறது.

அன்புள்ள அனாமதேயர்களுக்கு...

இந்தியக் கிரிக்கெட் பற்றிய எனது பதிவு பார்த்து, இதற்குமுன் இல்லாத அளவிற்கு அனாமதேய” பின்னூட்டங்கள் எனக்கு வந்தன. ஏற்கெனவே எனது சில பதிவுகளுக்கு, இப்படிச் சில அனாமதேயக் கருத்துகள் வந்ததுண்டு. உண்மை போலத் தோன்றினால், என்கருத்திற்கு மாறுபட்ட பின்னூட்டங்களையும் வெளியிட்டிருக்கிறேன்.அப்படி இருந்தும் ஏன் இப்படி...?

அன்புள்ள அனாமதேயர்களே!
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்

வெற்றி பெற்ற கொம்பன்!



கார்த்திக்கு இது இரண்டாவது பருத்தி வீரன்! 

அதே வீறாப்புடன் மெட்ராஸ் படத்தின் பகுதிவாழ்க்கையை மெருகேற்றி, தென்தமிழகத்தின் கொம்பையா பாண்டியன் (எ) கொம்பனாக அருமையாக இயல்பாக மீசையை முறுக்கிக் கொண்டே நடித்திருக்கிறார்.

ஏற்கெனவே குட்டிப்புலியில் எட்டடி பாய்ந்திருந்த இயக்குநர் முத்தையா இதில் பதினாறு அடி பாய்ந்திருக்கிறார்! 

எங்களது இரண்டு பட்டிமன்றங்களைப் பார்க்க அழைக்கிறேன்

எங்களது இரண்டு பட்டிமன்றங்கள்
பார்க்க அழைக்கிறேன்
--------------------
கலைஞர் தொலைக்காட்சியில்
எங்கள் பட்டிமன்றம்
-----------------------------------------