எனது 3 நூல்கள் வெளியீட்டுவிழா - அழைப்பிதழ் சமூக-கல்வி-இலக்கிய ஆர்வலர்கள் வருக!

எனது 3 நூல்கள் வெளியீட்டுவிழா 
அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன் 

சமூக-கல்வி-இலக்கிய-ஆர்வலர்கள் 
நண்பர்களோடு வருக! 

பின்வரும் அழைப்பிதழில் கண்டுள்ளவாறு, 
எனது நூல்களின் வெளியீட்டுவிழா 
புதுக்கோட்டையில் நிகழவுள்ளது.

நாள்-05-10-2014 ஞாயிறு - மாலை6-00மணி 
நகர்மன்றம் வடக்கு ராஜவீதி
புதுக்கோட்டை  

உண்மையான மக்கள் கலைஞன் 
நெல்லை கரிசல் குயில் கிருஷ்ணசாமி யின் 
அற்புதஇசை நிகழ்ச்சி பார்க்க 
முன்னதாகவே வரவேண்டும்.
என
அன்புடன் அழைக்கிறேன்
அன்புடன்,
தோழமையுள்ள - 
நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
அலைபேசி எண்-94431 93293
------------------- இதோ உங்களுக்கான அழைப்பிதழ் --------------- 


அழைப்பிதழில் உள்ள தேதி மட்டும் 
எங்கள் ஊர் நகராட்சித் தேர்தல் காரணமாக 
அக்டோபர்-05ஆம் தேதி 
என  மாற்றப்பட்டுள்ளது.
வேறு எந்த மாற்றமும் இல்லை.

நூல்களுக்கான அட்டை ஓவியங்கள் 
1,3-ஓவியர் மருது அவர்கள், சென்னை
“கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ -
 அட்டை ஓவியம் திரு குமார், சிவகாசி
அழைப்பிதழ் வடிவமைப்பு-
எம்எஸ்ஆர் டிஜிடல்ஸ், புதுக்கோட்டை.






அழைப்பிதழை அஞ்சலில் பெற விழையும் நண்பரகள் 
எனது மின்னஞ்சலுக்கு 
உங்கள் முகவரியைத் தெரிவிக்குமாறு 
அன்புடன் வேண்டுகிறேன் - 
-எனது மின்னஞ்சல்-
muthunilavanpdk@gmail.com
--- மற்றவை நேரில்... நன்றி வணக்கம் ---
---------------------------------------------------------- 

26 கருத்துகள்:

  1. விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. அட்டகாசமாய் இருக்கிறது அண்ணா அழைப்பின் அமைப்பு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிசரி... அழைப்பிதழ் அனுப்பவேண்டிய பட்டியல் தயாரிக்க,
      உன் வீட்டுக்காரருடன் எப்ப வருகிறாய்? (அண்ணன் விழாவுக்குத் தங்கைதானே வருவோரை வரவேற்க முன்பே வரவேண்டும்?)

      நீக்கு
    2. அண்ணா!!:)) அதைவிட மகிழ்ச்சியான விஷயம் ஏதேனும் இருக்கா என்ன!! அதுவுமில்லாமல் அது நாம் வீட்டு விழா இல்லையா அண்ணா!! இதோ கிளம்பிட்டேன்:)

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஐயா நன்றி. தங்கள் இருப்பிடம் தெரியவில்லை.
      அருகில் -ஐம்பது கி.மீ.க்குள்- என்றால் வாருங்கள்.
      இல்லையேல் அன்பான வாழ்த்தைத் தாருங்கள். அதுபோதும்.

      நீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி அண்ணா...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! அட்டை ஓவியங்கள் அருமையாய் உள்ளன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சிகலந்த நன்றிம்மா. அழைப்பிதழும் அனுப்புவேன்.
      அவ்வளவு தூரத்திலிருந்து வரவேண்டாம். உன் அன்பான வாழ்த்தே போதும்.புத்தகங்களையும் அனுப்பி வைப்பேன்

      நீக்கு
  5. வாழ்த்துகள் ஐயா !!! நூல அட்டைப்படங்கள் அருமை... அழைப்பிதழ் வடிவமைப்பும் நன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் புதுக்கோட்டை அருகில்தானே?
      இந்த மின்-வாழ்த்தெல்லாம் வேண்டாம். நேரில் வருக. சந்திக்கும் ஆவலுடன்..

      நீக்கு
  6. கவிஞருக்கு வாழ்த்துக்கள்! இன்றைய பதிவு ஒரே வண்ண மயம்!

    பதிலளிநீக்கு
  7. விழா வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி குமார். நீங்கள் இங்கு வந்தபோதும் சந்திக்க இயலாமல் போய்விட்டது. எனது மின்னஞ்சல் (இந்தப் பதிவில் உள்ளது) முகவரிக்கு உங்கள் -வெளிநாட்டு- முகவரியைத் தெரிவியுங்கள். என் மகன் அங்கு வருகிறான், புத்தகம் தந்து அனுப்புவேன்.

      நீக்கு
    2. ஐயா...
      வணக்கம்.
      தங்களுடன் பேச வேண்டும் என்ற எனது ஆவா இன்னும் பூர்த்தி ஆகாமல் தள்ளிக் கொண்டே போகிறது. இந்த வாரத்தில் கண்டிப்பாக தங்களுடன் பேசுகிறேன்....

      நீக்கு
  8. நிலவன் அண்ணா இத் தங்கையின் இவ் மின் வாழ்த்தை பொன் வாழ்த்தாக ஏற்றுக் கொள்ளுங்கள் அண்ணா. அழைபிதழும் அட்டைப்படங்களும் அருமை! விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிம்மா. உண்மையான வாழ்த்துகள் தரும் உற்சாகத்தில் மேலும் சிறப்பாக எழுதவும் பேசவும் ஊக்கம் கிடைக்கிறது.

      நீக்கு
  9. விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, அழைப்பிதழ் அனுப்புவேன். அவசியம் நம் தஞ்சை நண்பர்களுடன் வரவேண்டுகிறேன்.

      நீக்கு
  10. வருவதாய்தான் திட்டம் அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் சந்திப்பதைவிட மகிழ்ச்சி வேறென்ன எட்வின்? அடுத்து நம் நண்பர்கள் ஆங்காங்கே புத்தக அறிமுக-விமர்சனக் கூட்டங்கள் நடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் நீங்கள் அவசியம் கலந்துகொண்டு என் புத்தகங்களைப் பற்றிப் பேச வேண்டும்.

      நீக்கு
  11. அருமை மூன்று புத்தகங்களின் அட்டைப்படமும்,அழைப்பிதழும்....ஆவலுடன் காத்திருக்கின்றேன்...சார்
    விழாப்பணி செய்ய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கவிஞரே... தங்கள் வலைப்பக்கத்திலும் எடுத்துப் போட்டதைப் பார்த்தேன். (இதைத்தான் “இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்வது” என்கிறார்களோ?)

      நீக்கு
    2. ஐய கட்டாயம் வருவேன் .உங்கள் அறிவையும் அனுபவத்தையும் நானும் கொஞ்சம் அள்ளிக்கொள்ள .....

      நீக்கு
  12. முப்பரிமாணப்படத்திற்குக் கண்ணாடிக் கொடுத்துவிட்டீர்கள்,,,,,வந்துவிடுவேன் அவசியம்...

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
    வணக்கம். தங்களின் புத்தக வெளியீட்டு விழா அறிந்து மகிழ்ச்சி. ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ புத்தகம் தலைப்பே மாபெரும் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது. மிக அருமையான சிந்தனை.
    வாழ்த்துகள். நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு