கலைஞர்கள்-எழுத்தாளர்களின் தேர்தல் அறிக்கை!


15.04.2014  மாலை 3 மணி அளவில்  சென்னை  சேப்பாக்கம்  ப்ரெஸ்க்ளப்பில்  வெளியிடப்பட்ட  அறிக்கை.  
தமிழக வரலாற்றில் 
224 கலைஞர்கள்கல்வியாளர்கள் எழுத்தாளர்கள்  ஒன்று கூடி  
இப்படி  ஒரே குரலில்  ஒரு வேண்டுகோளை  
தமிழ் மக்கள்  மத்தியில்  ஒலித்தது 
சமீப காலங்களில் இதுவே முதல் முறை.....  
இனி அவர்களின் அறிக்கை -

பா.ஜ.க. கூட்டணியை நிராகரிப்பீர்
200க்கு மேற்பட்ட  கல்வியாளர்கள்-கலைஞர்கள்-எழுத்தாளர்கள்
தமிழக மக்களுக்கு விடுத்துள்ள தேர்தல் வேண்டுகோள்
சென்னை, 16-04 - 2014
இந்து அரசு ஒன்றை  அமைப்பதைக்  குறிக்கோளாகக்  கொண்டு இயங்கும்  ஒரு  இயக்கத்தின்  முன்னணி  அமைப்பாக  உள்ள ஒரு கட்சி, வரும்  நாடாளுமன்றத்  தேர்தலில்  வெற்றி பெற்று  ஆட்சியைக் கைப்பற்றுவதற்குஇந்திய  வரலாற்றில்  வேறெப்போதும்  இல்லாதஅளவிற்குத்  தீவிர முயற்சியில்  இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக்  கொன்று குவித்த  கொடுஞ் செயலுக்குத்  தலைமை தாங்கியது  மட்டுமின்றிஅதற்காக  இதுவரை  வருத்தம்  தெரிவிக்காத நரேந்திர மோடிதான்  இந்த முயற்சியிலும்  தலைமை ஏற்றுள்ளார்.
எழுத்தாளர் அழகிய பெரியவன்
இந்த நாட்டில்  மிகவும்  சக்தி வாய்ந்த  கார்ப்பொரேட்  நிறுவனங்கள் இதற்குப்  பின்புலமாக  உள்ளனகார்போரேட்  மூலதனமும் வகுப்புவாத  சக்திகளும்  அமைத்துள்ள  இந்தக் கூட்டணிநமது மதச்சார்பற்ற  ஜனநாயகத்தின்  எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்த ஆபத்தை எதிர்த்து இன்று இந்தியத் துணைக்கண்டம்முழுவதிலுமுள்ள  எழுத்தாளர்கள்சிந்தனையாளர்கள்இதழாளர்கள்மற்றும்  கலைஞர்கள்  களம் இறங்கியுள்ளனர்அவர்களின்  குரலுடன் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களாகிய நாங்களும் இணைந்துகொள்கிறோம்.

தமிழகத்தைப்  பொறுத்த மட்டில்  ஆதிக்க சாதிகளின்  கூட்டணியை உருவாக்கிச்  செயல்படும்  ஒரு கட்சியும்  இக் கூட்டணியில் இணைந்திருப்பது  இந்த ஆபத்தை இரட்டிப்பாக்குகிறதுமதச்சார்பின்மையை  முன் வைத்து  உருவான  திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும்  இரு கட்சிகள்  மோடியை  முன்நிறுத்துவதில்  துணை போகின்றன.

இந்த ஆபத்து குறித்துத்  தீவிரமாகச் சிந்தித்துஇதைத்தடுப்பதற்கான  எல்லவிதமான  செயற்பாடுகளையும்  மேற்கொண்டு, நமது  மதச் சார்பற்ற  ஜனநாயகத்தைக்  காப்பாற்ற வேண்டுமென பொறுப்புள்ள குடிமக்களையும்அமைப்புக்களையும் நாங்கள்வற்புறுத்திக்  கேட்டுக் கொள்கிறோம்
பா..கவால்  தலைமைதாங்கப்படும்  தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக  வாக்களித்து, ஆட்சியைக்  கைப்பற்ற முனையும் இந்தக் கார்பொரேட் - மதவாத -சாதிய  சக்திகளின்  முயற்சியை  வீழ்த்துமாறு  தமிழகவாக்காளர்களைக்  கேட்டுக் கொள்கிறோம்மதச் சார்பர்றஜனநாயகசக்திகளை  ஆதரித்து வாக்களிக்க  வேண்டுகிறோம்.

“Never before in post-independence India have witnessed political forces, which are a front for an organisation committed to create a Hindu Rashtra, strong bid for power in the coming elections. These forces are led by a person who presided over a pogrom against Muslims in Gujarat in 2002 and has never accepted his role in that ghastly incident. And they continue to get support and the backing from the most powerful corporate houses in the country. The prospect of this alliance of corporate capital and communal forces coming to power constitutes a palpable threat to the future of our secular democracy.

"Writers, artists and intellectuals all over India are deeply concerned with this danger and are appealing to the electorate to take note of this danger. We, the Tamil writers and artists are also joining our hands with them.

" We are more concerned about the situation in Tamilnadu as the casteist forces have joined hands with these communalist forces. Two other parties which claim the secular legacy of the Dravidian parties are also in that coalition.

“We urge all responsible individuals and political formations to ponder over the situation and urgently take necessary steps to defend our secular democracy. We appeal to the electorate to foil this corporate-communal alliance’s bid for power by voting against the BJP-led NDA."
கையெழுத்திட்டுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள்

கி.இராஜநாராயணன்மூத்த எழுத்தாளர்புதுவை
பிரபஞ்சன்,சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர்சென்னை
இந்திராபார்த்தசாரதிமூத்த தமிழ் எழுத்தாளர்டெல்லி
முனைவர்தொ.பரமசிவன்எழுத்தாளர்வரலாற்றறிஞர்திருநெல்வேலி,
கவிக்கோ அப்துல் ரஹ்மான்மூத்த தமிழ்க் கவிஞர்சென்னை,
விஜய்சங்கர்ஆசிரியர்ஃப்ரன்ட்லைன்சென்னை
வெங்கடேஷ்சக்கரவர்த்திதிரைக் கோட்பாட்டாளர்ஹைதராபாத்
கலாப்ரியா,மூத்த கவிஞர்திருநெல்வேலி
அப்பண்ணசாமிஎழுத்தாளர்/இதழாளர்சென்னை
வெளி ரங்கராஜன்எழுத்தாளர்/இதழாசிரியர்,சென்னை
.தமிழ்ச்செல்வன்எழுத்தாளர்த. மு...பத்தமடை,
எஸ்.வி.இராஜதுரைமூத்த எழுத்தாளர்கரூர்
மருத்துவர் ருத்ரன்,எழுத்தாளர்சென்னை
எஸ்,ராமகிருஷ்ணன்எழுத்தாளர்சென்னை,
வஹீதையா கான்ஸ்டான்டின்எழுத்தாளர்நாகர்கோவில்
அம்பை,எழுத்தாளர்டெல்லி
வண்ணதாசன் (கல்யாண்ஜி), எழுத்தாளர்,திருநெல்வேலி
.கீதாஎழுத்தாளர்சென்னை
கோணங்கி,எழுத்தாளர்கோவில்பட்டி,

முனைவர் ஆனந்திபேராசிரியர்சென்னை
.மார்க்ஸ்எழுத்தாளர்,சென்னை
சந்திராஎழுத்தாளர்சென்னை
கவின்மலர்எழுத்தாளர்,சென்னை
கோ.சுகுமாரன்மனித உரிமைப் போராளி/எழுத்தாளர்,புதுவை
ராமானுஜம்எழுத்தாளர்மொழிபெயர்ப்பாளர்சென்னை,
தமிழச்சி தங்கபாண்டியன்கவிஞர்சென்னை
யூமா வாசுகி,எழுத்தாளர்சென்னை
முனைவர் சாதிக்கவிஞர்/முன்னாள்துணைவேந்தர்சென்னை
ஞாநிஎழுத்தாளர்/இதழாளர்சென்னை,
துரைராஜ்மூத்த இதழாளர்திருச்சி
வாசுதேவன்எழுத்தாளர்/விமர்சகர்சென்னை
முனைவர் ராஜன் குறைஎழுத்தாளர்டெல்லி,
யமுனா ராஜேந்திரன்எழுத்தாளர்லண்டன்
ஓவியர் விஸ்வம்,சென்னை
ஓவியர் நடேஷ்சென்னை
பா.ரஞ்சித்திரைப்படஇயக்குனர்சென்னை
அமீர்திரைப்பட இயக்குனர்சென்னை,
வெற்றிமாறன்தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர்,சென்னை,
பொ.வேல்சாமிஎழுத்தாளர்/தமிழறிஞர்நாமக்கல்,
வி.எம்.எஸ்.சுபகுணராஜன்எழுத்தாளர்திரை இதழாசிரியர்,சென்னை
சு.வெங்கடேசன்சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ்எழுத்தளர்மதுரை
பாரதி தம்பிஎழுத்தாளர்/இதழாளர்சென்னை,

கிராமியன்எழுத்தாளர்/விமர்சகர்திருச்சி
ஷோபாசக்தி,எழுத்தாளர்பாரிஸ்
முகம்மது சிப்லிஇதழாளர்சென்னை
அஜயன்பாலாஎழுத்தாளர்சென்னை
அசதாஎழுத்தாளர்விழுப்புரம்,
முனைவர் வீ.அரசுஎழுத்தாளர்/பேராசிரியர்சென்னை
பாஸ்கர்சக்திஎழுத்தாளர்சென்னை
முருகேச பாண்டியன்எழுத்தாளர்/விமர்சகர்மதுரை
முருக பூபதிஅரங்க இயக்குனர்கோவில்பட்டி,
பிரளயன்அரங்க இயக்குநர்சென்னை
சுபா தேசிகன்இதழாளர்/எழுத்தாளர்சென்னை
சி.மோகன்எழுத்தாளர்/சிறு பத்திரிக்கைஎழுத்தாளர்சென்னை
தளவாய் சுந்தரம்எழுத்தாளர்சென்னை,
சங்கர ராம சுப்பிரமணியன்எழுத்தாளர்இதழாளர்சென்னை
மீனா,எழுத்தாளர்திருவண்ணாமலை
பிருந்தாஎழுத்தாளர்சென்னை,
நேசமித்திரன்கவிஞர்/இதழாசிரியர்நைஜீரியா
.கோபாலகிருஷ்ணன்இதழாளர்சென்னை,

ஜெயராணிஎழுத்தாளர்/இதழாளர்சென்னை
தீஸ்மாஸ் டீ சில்வா,எழுத்தாளர்/இதழாளர்சென்னை
லஷ்மி சரவண குமார்எழுத்தாளர்,சென்னை
சிபி செல்வன் எழுத்தாளர்சேலம்
அழகிய பெரியவன்எழுத்தாளர்வேலூர்
தேவிபாரதிஎழுத்தாளர்சென்னை
கவிதாசொர்ணவல்லிஎழுத்தாளர்/இதழாளர்சென்னை
மனுஷ்யபுத்திரன்,கவிஞர்,சென்னை
சுசீந்திரன் நடராசாஎழுத்தாளர்பெர்லின்.
.மெஹபூப் பாஷாமனித உரிமைச் செய்தி இதழாசிரியர்மதுரை,
ரியாஸ் குரானாஎழுத்தாளர்/விமர்சகர்இலங்கை
ஆர்.பி.அமுதன்,திரைப்பட இயக்குநர்சென்னை
பிரகதீஸ்வரன்நாடகக் கலைஞர்/பதிப்பாளர்புதுகை
சுகுணா திவாகர்எழுத்தாளர்/கவிஞர்சென்னை,
விஷ்ணுபுரம் சரவணன்கவிஞர்சென்னை
நீலகண்டன்பதிப்பாளர்,சென்னை
பா..மகிழ்நன்ஊடகவியலாளர்சென்னை,

இரா.தெ.முத்துஎழுத்தாளர்சென்னை
,கு,ராஜன்நூலாசிரியர்,சென்னை
அருள் எழிலன்எழுத்தாளர்சென்னை
ஜீவ சுந்தரி,எழுத்தாளர்ன்னை,
அபு சாலிஹ்இதழாசிரியர்சென்னை,
ஷாஜஹான்எழுத்தாளர்டெல்லி
ஆர்.ஆர்.சீனிவாசன்ஆவணப்படஇயக்குநர்சென்னை
தி.கண்ணன்எழுத்தாளர்ஶ்ரீரங்கம்
வினிசர்ப்பனாஇதழாளர்சென்னை
புதுஎழுத்து மனோன்மணி,இதழாசிரியர்வேரிப்பட்டிணம்
ஜமாலன்எழுத்தாளர்/விமர்சகர்,ஷார்ஜா
கமலக்கண்ணன்திரைப்பட இயக்குனர்கோவை,
ஆத்மார்த்திகவிஞர்மதுரை
ஆதவன் தீஷண்யாஎழுத்தாளர்/இதழாசிரியர்ஓசூர்
தேனுகாஓவிய விமர்சகர்கும்பகோணம்
பேரா.பா.கல்விமணிகல்வியாளர்திண்டிவனம்
பேரா.சிவகுமார்,கல்வியாளர்சென்னை
பேராமு.திருமாவளவன்கல்வியாளர்,சென்னை
ஜாபர் சாதில் பாகவிஇதழாசிரியர்சென்னை,
ரஜினி,மனித உரிமைப் போராளிமதுரை
குட்டி ரேவதிகவிஞர்,சென்னை,
அருண்திரைப்பட இயக்கம்சென்னை
இளங்கோகிருஷ்ணன்கவிஞர்சுதிர் செந்தில்இதழாசிரியர்திருச்சி
ஐயப்பமாதவன்கவிஞர்சென்னை,

தாமிரா திரைப்பட இயக்குனர்
.கீரா திரைப்பட இயக்குனர் 
நக்கீரன்,கவிஞர்நன்னிலம்
லிபி ஆரண்யாகவிஞர்மதுரை
குமார செல்வா,எழுத்தாளர்மார்த்தாண்டம்
ஜே.ஆர்.வி.எட்வர்ட்எழுத்தாளர்,நாகர்கோவில்
இசைகவிஞர்கோவை 
மகுடேஸ்வரன்கவிஞர்,திருப்பூர்
மேகவண்ணன்எழுத்தாளர்இராமேஸ்வரம்,
றஞ்சி,எழுத்தாளர்ஸ்விட்சர்லாந்த்
அன்புச் செல்வன்கவிஞர்,மதுரை,
பவுத்த அய்யனார்எழுத்தாளர்/பதிப்பாளர்சென்னை,
முத்துமீனாள்எழுத்தாளர்சென்னை
யாழன் ஆதிகவிஞர்,ஆம்பூர்,
தை.கந்தசாமிகவிஞர்திருத்துறைபூண்டி,
முனைவர்ரவிச்சந்திரன் 
ஶ்ரீராமச்சந்திரன்எழுத்தாளர்கோவை,
நிஷா மன்சூர்,கவிஞர்மேட்டுப்பாளையம்,
அருண்திரைப்பட இயக்கம்,சென்னை,
சே.கோச்சடைஎழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர்,காரைக்குடி,
முனைவர் ஜீவரத்தினம்ஆய்வாளர்ரெட்டைவயல்,
சி.சரவண கார்த்திகேயன்எழுத்தாளர்பெங்களூரு,
போஸ் பிரபு(பிரேமா), கவிஞர்சிவகாசி
யுவ கிருஷ்ணாபத்திரிகையாளர்,மடிப்பாக்கம்
லீனா மணிமேகலைகவிஞர்சென்னை,

சா.விஜயலக்ஷ்மிகவிஞர்சென்னை
நந்தகுமார்எழுத்தாளர்கடார்,
பா.ரவீந்திரன்எழுத்தாளர்ஸ்விட்சர்லாந்த்
தளவாய்எழுத்தாளர்/இதழாளர்சென்னை
பூ.இராமுதிரைக் கலைஞர்சென்னை
கருப்புகருணாகுறும்பட இயக்குநர்திருவண்ணாமலை
சிவக்குமார்திரைஆய்வு எழுத்தாளர்சென்னை
உமர் ஃபாரூக்எழுத்தாளர்கம்பம்,
தமிழ்நதிகவிஞர்கனடா
சுகன் கனகசபைகவிஞர்பாரிஸ்,
.வெற்றிவேல்எழுத்தாளர்சவூதி அரேபியா
கார்டூனிஸ்ட் பாலா,சென்னை
அதிஷாஇதழாளர்சென்னை
வெய்யில்கவிஞர்,காரைக்கால்,
நடராஜன் கிருஷ்ணன்எழுத்தாளர்குன்றத்தூர்,
நந்தகோபால்இதழ் ஆசிரியர்சென்னை
எஸ்.காமராஜ்எழுத்தாளர்,சாத்தூர்
ஜபருல்லா ரஹ்மானிஎழுத்தாளர்சிங்கப்பூர்
நீரைமகேந்திரன்இதழாளர்சென்னை
கவுதம சக்திவேல்மனிதஉரிமைப் போராளிபொள்ளாச்சி
நரன்கவிஞர்சென்னை,

கவிதா முரளீதரன்இதழாளர்சென்னை
முனைவர் பெருந்தேவி,எழுத்தாளர்நியூயார்க்
விஷ்ணுராம்ஊடகவியலாளர்சென்னை,
ராஜவேலுலேபர் நியூஸ் நிர்வாகிசென்னை
சிவகுமார்,எழுத்தாளர்/பேராசிரியர்சென்னை
மாரிச்செல்வன்எழுத்தாளர்,சென்னை,
முகம்மது ஆசிக்கவிஞர்வல்லம்
இரா.ஜவஹர்மூத்தஇதழாளர்சென்னை
டி.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர்சென்னை
ஃபைஸ் ஃபைசல்இதழாசிரியர்,சென்னை
மு.சிவகுருநாதன்எழுத்தாளர்திருவாரூர்
டாக்டர்ஹிமானா சையத்எழுத்தாளர்சென்னை
பாரதிநாதன்,நாவலாசிரியர்சென்னை
இரா,வினோத்ஊடகவியலாளர்,பெங்களூரு
இளவேனில்கவிஞர்பள்ளிப்பட்டி
சக்தி ஜோதி,கவிஞர்மதுரை
எஸ்.ஷங்கர்இதழாளர்மடிப்பாக்கம்
ஶ்ரீ குமார்,விமர்சகர்சென்னை
கார்த்திகைப் பாண்டியன்எழுத்தாளர்மதுரை.
தேவரசிகன்கவிஞர்கும்பகோணம்
ஜி.சரவணன்எழுத்தாளர்,அம்மாசத்திரம்
சிராஜுதீன்பதிப்பாளர்சென்னை,
பிரேமா ரேவதி,எழுத்தாளர்சென்னை
கு.விமர்சகர்மதுரை
ஜி.ஶ்ரீதரன்,எழுத்தாளர்ஓசூர்
அத்தாவுல்லாஎழுத்தாளர்நாகர்கோவில்
ஆளூர்ஷாநவாஸ்எழுத்தாளர்சென்னை
ஆர்,முருகப்பன்நூலாசிரியர்,திண்டிவனம்
மா..மதிவாணன்ஊடகத்துறைசென்னை
சாம்ராஜ்,கவிஞர்மதுரை
யவனிகா ஸ்ரீராம்கவிஞர்திண்டுக்கல்
செல்மாபிரியதர்ஷன்கவிஞர்திண்டுக்கல்
.கரீம்எழுத்தாளர்கோவை,
அறிவழகன்எழுத்தாளர்சேலம்
.மதிவண்ணன்கவிஞர்,பெருந்துறை
குமார் அம்பாயிரம்எழுத்தாளர்திருவண்ணாமலை,
பிரியாபாபுஎழுத்தாளர்சென்னை,
முனைவர் தி.பரமேஸ்வரிகவிஞர்/பதிப்பாசிரியர்காஞ்சீபுரம், பவாசெல்லத்துரைஎழுத்தாளர்திருவண்ணாமலை
கே.வி.சைலஜா,எழுத்தாளர்/பதிப்பாளர்திருவண்ணாமலை
கே.விஜெயஸ்ரீ,எழுத்தாளர்திருவண்ணாமலை
.முத்துகிருஷ்ணன்எழுத்தாளர்,மதுரை
நாடகக்கலைஞர் பிரளயன்
எழுத்தாளர் பிரபஞ்சன்

எழுத்தாளர் அ.மார்க்ஸ்

திரைக்கலைஞர் ரோகிணி

எழுத்தாளர்
லிவிங்ஸ்மைல் திவ்யா

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்                







தமயந்திஎழுத்தாளர்செனனை,
நவீன்திரைப்பட இடக்குனர்சென்னை
பிரின்ஸ் என்னாரெசுபெரியார்திரைப்பட இயக்குனர்சென்னை
பாலசுப்பிரமணியம்பொன்ராஜ்எழுத்தாளர்சென்னை
நிழல் திருநாவுக்கரசுஎழுத்தாளர்/இதழாசிரியர்சென்னை
ராஜ்முருகன்திரைப்பட இயக்குனர்,சென்னை
புகழேந்திஓவியர்சென்னை
ட்ராட்ஸ்கி மருதுஓவியர்,சென்னை
ரோகிணிநடிகைசென்னை
ஸ்டாலின் ராஜாங்கம்,எழுத்தாளர்மதுரை
கரிகாலன்கவிஞர்விருதாசலம்,தமிழ்ச்செல்வி,ஏழுத்தாளர்,விருத்தாசலம்
,வெண்ணிலாகவிஞர்,வந்தவாசி
பாரதி கிருஷ்ணகுமார்இயக்குனர்சென்னை
யாழினிமுனுசாமிஎழுத்தாளர்சென்னை
பி.ஜிசரவணன்கவிஞர்மதுரை,
மீனா கந்தசாமிஎழுத்தாளர்சென்னை
கோவி லெனின்,பத்திரிகையாளர் , சென்னை
புதிய மாதவிஎழுத்தாளர் மும்பை,
கண்மணி ராஜா முகமதுதிரைத்துறைசென்னை,
காலபைரவன்,எழுத்தாளர்விழுப்புரம்
சீனு இராமசாமிதிரைப்பட இயக்குனர்,சென்னை
நாச்சியாள் காந்திஊடகவியலாளர்சென்னை,
வெற்றிவேல்ஆவணப்பட இயக்குநர்சென்னை
நறுமுகை தேவி,கவிஞர்கோவை
ஏகாதேசிபாடலாசிரியர்சென்னை
ஶ்ரீஜித்,அரங்கக் கலைஞர்சென்னை
லிவிங்ஸ்ஐல் வித்யாஅரங்கக்கலைஞர்சென்னை
மு.வி.நந்தினிஇதழாளர்சென்னை,
------------------------------------------------------------------------------------------------------------ 
சூப்பர் ஸ்டாரை இவரே போய்ச் சந்தித்தாலும் சரி...
சூப்பர் தளபதி இவரை வந்து சந்தித்தாலும் சரி...
“உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே!”

அறிக்கைத் தகவலுக்கு நன்றி - திரு எஸ்.ராமன் வேலூர்,
வலைப்பக்கம் - http://ramaniecuvellore.blogspot.in/2014/04/blog-post_16.html

14 கருத்துகள்:

  1. அருமை!! நல்லதொரு முயற்சி..மதச்சார்பற்ற ஆட்சி அமைய..
    முன் எப்போதும் இல்லாத அளவு இப்பொழுது பயம் வந்திருக்கிறது எனக்கு..எப்போதோ நடந்த கலவரத்திற்கு இப்பொழுது என்ன என்று கேட்கும் படித்த மக்களைப் பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும்..அவர்கள் மனதிலும் மதவெறியே உள்ளது என்று அறியும்போதும்..
    பகிர்விற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. சிலவற்றை நாமே மறக்க நினைத்தாலும் மறக்க முடிவதில்லையே? அந்தப் பட்டியலில் 2002குஜராத் கலவரம் அதைக் கலவரம் என்பதுகூடத் தவறு. திட்டமிட்ட கலகம். அதை எப்படி மறப்பது? நலலதே நடக்க இத் தவறுகளை இனியும் செய்ய நினைக்காத நிலை வேண்டும். நன்றி சகோதரி.

      நீக்கு
  2. கோத்ரா விற்கு பின் எந்த படைப்பாளியும்
    மோடியை ஆதரித்தால் தானே விந்தை?!
    நல்ல விஷயம் அண்ணா. ஊர் கூடி தேரிழுப்போம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மைதிலி, என்னிடம் யாரும் அணுகவில்லை, கேட்டிருந்தால் இன்னும் பல நூறுபேரிடம் ஒப்பம் பெற்று அனுப்பியிருக்க முடியும்ல? எனினும் நல்லதே நடக்கட்டும்.

      நீக்கு
  3. சிவப்பு வண்ணப் பின்னணியில்
    தகவல் இருப்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது
    யாருக்கு வோட்டளிக்க வேண்டாம் என
    ஒற்றுமையாகச் சொல்லும் இவர்களிடம்
    யாருக்கு ஓட்டளிக்கலாம் எனக் கேட்டால்
    சபை நிச்சயம் சிதறிவிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் யார்-யாருக்கு வேண்டாம் என்பதை முடிவுசெய்து கொண்டால், பிறகு அவரவர் விருப்பத்திற்கு புரிதலுக்குத் தக வாக்களிக்கலாமே? அதுதானே ஜனநாயகம்? இவர்கள் எல்லாரும் சிவப்புப் பின்னணி (?) உள்ளவர் அல்லர். இந்திரா பார்த்தசாரதியை உங்களுக்குத் தெரியாதா? அப்துல்ரகுமான், கி.ரா., ரோகிணி, கவிதா முரளிதரன்? எல்லாருமா கம்யூனிஸ்ட்?
      ரமணி அய்யா நீங்களுமா அவசரப்படுகிறீர்கள்? ஆனால், ஒன்று தெரிகிறது அய்யா, நியாயத்தைப் பேசினால், மதச்சார்பின்மை பேசினால், அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று ஏன் எல்லாரும் நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை அய்யா. எனினும் தங்களின் கருத்திற்கு நன்றியும் வணக்கமும்

      நீக்கு
  4. வணக்கம்,

    மதச்சார்பின்மை பற்றிப் பெசும் அனைவருக்கும் எனது பணிவான கேள்வி.

    1) தனது மதத்தினர் அனைவரும் யாருக்கு ஒட்டளிக்க வேண்டும் என்பதைக் காலம் காலமாக மசூதிகளும் சர்ச்சுகளும் முடிவு செய்கின்றன என்பதை மறுக்கமுடியுமா.

    2) இதே போன்று தனது மதத்தின் ஓட்டுவங்கியைக் காட்டி அரசைப் பணியவைப்பது சரியா/தவறா. (ஒரு மதம் சார்ந்த கட்சித் தலைவர் .... பற்றி முதல்வர் பேசாவிட்டால் எங்கள் மதத்தினரின் ஓட்டு கிடைக்காது என்று கூறியது தற்போதைய செய்தி)

    3) 2000 பேர் கொல்லப்பட்ட துயரமான நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமான 60 பேர் சிலரால் எரித்துக் கொல்லப்பட்டது பற்றி இவர்களில் ஒருவராவது பேசாதது ஏன். அப்படிச் செய்தவர்களுக்கு அத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது. (அவர்கள் உள்ளூர்க் காரர்கள் என்பது முதலில் வந்த செய்தி)

    4) இந்துக்கள் செய்தால் அது தீவிரவாதம், மற்றவர்கள் செய்தால் அது வெளிநாட்டினரின் ஊடுறுவல் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா. இருப்பினும் அவர்கள் இருக்க இடம் கொடுத்தவர்கள் யார்.

    5) அமைதிப் பூங்காவாக இருந்த்த தென்னிந்தியாவில் ஸிமி போன மத அமைப்புகள் வந்ததற்குக் காரணம் என்ன.

    6) ஒரு சிறிய தகராறு என்றாலும் கூட்டம் கூட்டமாக ஒரு மதத்தினர் வருவது வட இந்தியாவில் மிகச் சாதரணமான விசயம். பின்பு ஏற்படும் வன்முறைகளை இருவரும் செய்திருந்தாலும் எல்லாப் பழியையும் மற்ற மதத்தினரின் போட்டுவிட்டு ஓட்டைக் காட்டி அரசை மிரட்டுவதுதான் நடந்திருக்கிறது.

    7) இந்துத்துவம் பற்றிப் பேசும் எவரும் மதத்தின் பெயரால் உள்ள மற்ற கட்சிகளைப் பற்றி வாய் திறக்காதது ஏன்.

    நமது நாட்டில் மதச் சார்பின்மை பற்றிப் பேசுவது கற்றவர்கள் போடும் வேசம். எல்லோரும் விரும்புவதும் மதச் சார்பின்மைதான். இருப்பினும் உண்மைகள் ஓட்டு வங்கி அரசியலால் ஒருதலைப்பட்சமாக மூடி மறைக்கப் படுகின்றன.

    நன்றி,

    கோபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோபாலன் வணக்கம்.
      எனக்குத் தெரிந்த பதில்கள் இவை, இவற்றை நீங்கள் ஏற்கமாட்டீர்கள் எ்ன்பதும் எனக்குத் தெரிந்ததுதான், எனினும் இதைப்படிக்கும் என் நண்பர்களுக்காக இதை வெளியிடுகிறேன் -
      (1)மறுக்கமுடியாதுதான். மதத்தலைவர்களின் வேலையே அதுதானே? -இந்து மதத்தையும் சேர்த்து.
      (2)தவறுதான். முன் பதிலின் பின் ஒட்டு மீண்டும்.
      (3)60பேர் கொல்லப்பட்டது அயோக்கியத்தனம் என்றால், அதற்குப் பதிலடியாக, 2000பேர் கொல்லப்படுவது யோக்கியமா?
      (4)மத-அடிப்படைவாதம், தீவிர வாதத்தை யார்செய்தாலும் அது தடுக்கப்படவேண்டும் - யார் செ்ய்தாலும்.
      (5)400ஆண்டுகளாக இருந்த பாபர் மசூதியில் ராஜிவ் காலத்தில் திருட்டுத் தனமாக இராமர் சிலையை கொண்டு வைத்துவிட்டு, அது இராமர் பிறந்த இடம் என்று அடம் பிடித்து, கோவில் கட்ட இடம் பிடிக்கும் மத-அடிப்படைவாதிகள் தான் காரணம்.
      (6) அரசை மிரட்டுவதும், தனக்கான அரசைக் கொண்டுவரத் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவதையும் யார் செய்வது? அப்படி யார் செய்தாலும் அது இந்தியாவுக்குக் கேடுதானே?
      (7)சிறுபான்மையின் தவறுகள் சிறிய விளைவாகவும், பெரும்பான்மையின் தவறுகள் பெரும் விளைவுகளையும் உருவாக்கும் எனும் சாதாரணமான கணக்குத்தான்.
      இப்போது எனது கேள்வி - சாமி கும்பிடுகிறவர்கள்தான் இன்னொரு சாமி கோவிலை இடிக்கிறார்கள். பேசாமல் எங்களைப் போல சாமியே வேண்டாமென்று இருப்பவர்கள் எந்தக் கோவிலையும் இடித்ததில்லையே? பேசாமல் எல்லாருமே சாமி வேண்டாமென்றால் சண்டையே இல்லை் அல்லவா? “கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும்பேச்சு, பலர் கஞ்சிக்கில்லாதார் வறுமைபோக்கவே கருத வேண்டியதை மறந்தாச்சு”-ப.கோ.க.
      தங்களின் விரிவான கருத்திற்கு நன்றி. விவாதம் தொடர நான் தயார், என் கடைசிக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால்...

      நீக்கு
    2. இந்த மாதிரி பொறுமையான விளக்கங்களை மதத்தை அரசியலுக்கு பயன்படுத்துவோரிடம் எதிர்பார்க்கமுடியாது. அருமையான விளக்கம் !!!

      நீக்கு
    3. ,
      நா.முத்துநிலவன்//

      என் கடைசிக் கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னால்..//
      மரத்திற்கு பிடி வேண்டியதில்லை
      கொடிக்கு வேண்டியதாகத்தான் இருக்கிறது

      சராசரி நிலை கடந்த அறிவு ஜீவிகளுக்கு
      மதம் கடவுள் தேவை இல்லைதான்

      சராசரிகளுக்கு அந்த நிலை கடக்கும் வரை
      முட்டாள்தனமானதாகினும் ஒரு நம்பிக்கை
      ஏற்படுத்த கடவுள் நம்பிக்கை தேவையாகத்தான்படுகிறது

      அதுவும் பகுத்தறிவுவாதிகள் மனைவியையும்
      மருமகளையும் கோவிலாக அனுப்பிக் கொண்டிருக்கும்
      இந்தக் காலச் சூழலில்...




      நீக்கு
    4. மதத்தை அரசியலில் கலந்த வரலாறு, இந்தியா முழுவதும் உண்டு. அதன் தொடர்ச்சிதான் இன்றைய மதவெறிக் கட்சிகள். அவற்றைத் தனிமைப் படுத்த அனைத்து மதங்களின் சாதாரண மக்கள் யோசித்து -உணர்ச்சி வசப்படாமல் - செயல்படவேண்டும் அதை ஊடகங்களைக் கையில வைத்திருப்பவர் விரும்புவதில்லை. ஏதாவது பதற்றம் இருந்தால்தான் உணர்ச்சிகளைத் தூண்டும் எதையாவது செய்தால்தான் அறிவு பிறழும் அவர்கள் நினைத்தது நடக்கும். இதற்கு மக்கள் இரையாகாமல் பார்க்க வேண்டியது மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நம்போன்றவர்களின் கடமை பெரிதல்லவா? நன்றி நண்பா.

      நீக்கு
    5. ரமணி அய்யாவுக்கு வணக்கம். திரு சோமசுந்தரம் அவர்களின் பின்னூட்டத்திற்கு இட்ட பதில் முதலில் வந்துவிட்டது. இப்போது உங்களுக்கு எனது நன்றியுடன் - “அதுவும் பகுத்தறிவுவாதிகள் மனைவியையும்
      மருமகளையும் கோவிலாக அனுப்பிக் கொண்டிருக்கும்
      இந்தக் காலச் சூழலில்“ - இது உங்கள் கிண்டல் என்பதை நான் ஏற்கிறேன், அவர்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்குபவன் அல்லேன். அவர்கள் உண்மையான பகுத்தறிவு வாதிகள் அல்லர் என்பதோடு, மனைவியை மருமகளை அவர்களின் ஜனநாயகத்தை மதிப்பவர் என்னும் பெயரோடு, அவர்களுக்கு விளக்க அறிவோ, பொறுமையோ, நடைமுறை உண்மையோ இல்லாதவர்கள் அவர்களை நான் பெரிதாக எண்ணுவதில்லை மற்றபடி “சராசரிகளுக்கு அந்த நிலை கடக்கும் வரை
      முட்டாள்தனமானதாகினும் ஒரு நம்பிக்கை
      ஏற்படுத்த கடவுள் நம்பிக்கை தேவையாகத்தான்படுகிறது“ என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அவர்களிடமதான் இன்னும் கூடுதல் பாசத்தோடும் உண்மையான அறிவோடும் செயல்பட்டாக வேண்டும். இன்னும் எத்தனை காலம்தான்..? மற்றபடி எனது கடைசிக் கேள்வி அப்படியே நிற்கிறதே? என்னையும் ஒருபொருட்டாக நினைத்துக் கருத்திடடமைக்கு நன்றியும் வணக்கமும் ரமணி அய்யா.

      நீக்கு
  5. நான் அவசரப்படவில்லை.
    மதத்தின் பெயரையே
    கட்சியின் பெயராகக் கொண்ட ஒரு கட்சியை
    உடன் வைத்துக் கொண்டு மதசார்பின்மை குறித்துப்
    பேசுகிற கட்சியை எல்லாம் விமர்சிக்காமல்
    பயந்து கொண்டாவது மதத்தின் பெயரை
    வெளிக்காட்டாமல் இருக்கிற கட்சியை விமர்சிப்பது
    எந்தவிதத்தில் சரி என எனக்குப் புரியவில்லை
    அதற்கு எழுத்தாளர்கள் என்கிற பட்டயம் வேறு
    என நினைக்கையில் கொஞ்சம் மனதிற்கு
    சங்கடமாகத்தான் உள்ளது

    நியாயம் பேசுபவன் கம்னியூஸ்ட் என்கிற
    எண்ணம் எல்லாம் மாறி நியாயம் போல்
    பேசுபவன் கம்னியூஸ்ட் என்கிற எண்ணம்
    மக்கள் மனதில் தோன்றி வெகு காலம் ஆகிவிட்டது

    அதை தேர்தல் முடிவு மிகச் சரியாகக் காட்டும்
    உடன் மனம் திறந்த பதிலுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நியாயம் பேசுபவன் கம்னியூஸ்ட் என்கிற
      எண்ணம் எல்லாம் மாறி நியாயம் போல்
      பேசுபவன் கம்னியூஸ்ட் என்கிற எண்ணம்
      மக்கள் மனதில் தோன்றி வெகு காலம் ஆகிவிட்டது“
      எனக்கு கம்யூனிஸ்ட்களைப் பிடிக்கும் கம்யூனிசம்தான் பிடிக்காது என்று எழுதிவரும் திரு சோ அவர்களின் தாக்கமா இது? அவர்களும் மனிதர்கள்தான் அய்யா. அவர்களிடமும் தவறு இருக்கிறது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுதான் செயல்படுகிறார்கள்.2002ஐ நியாயப்படுத்தி 2014இலும் செயல்பட உற்சாகமூட்டுகிறவர்களைப்பற்றி நீங்களும் பேசமாட்டீர்கள்! தேர்தல் வெற்றிகள் நல்லவர்களை அடையாளம் காட்டாது. மூவரும் ஒருவரல்ல என்றாலும், காமராசரும், இந்திராவும், ஜெயலலிதாவும் தோல்வியுற்றவர்கள் தான் என்பதை நீங்கள் மறந்தாலும் சாதாரண மக்கள்தான் இதை சாதித்தவர்கள் எனவே தேர்தலுக்குப் பின்னரான செயல்களும் முக்கியம். தங்களின் கருத்தில் நான் முரண்பட்டாலும், தாங்கள் மதித்துப் பின்னூட்டமிட்டதற்கு என் வணக்கங்கள் அய்யா. நன்றி

      நீக்கு