பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி



--படம் : திரு ராஜ்குமார், புதுக்கோட்டை
--செய்தி: தீக்கதிர் செய்தியாளர் திரு சு.மதியழகன் 
-------------------------------------------------------------------------------------------
      தமிழ்நாடு அரசின் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (DIET)  புதுக்கோட்டை   சார்பாக,  வரும்  2013-14 கல்வியாண்டில்  ஒன்பதாம் வகுப்பிற்குப் பாடம்கற்பிக்கும் பட்டதாரி   ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு (CCE) பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை தூயமரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  29>30-05-2013 தேதிகளில் நடைபெற்றன.
  தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய பாடங்களைக்கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார்  300 பேர் மாவட்டம் முழுவதிலும் இருந்து கலந்துகொண்டனர். 
       இதில் தமிழாசிரியர்க்கான பயிற்சியை புதுக்கோட்டை           அரசு   முன்மாதிரி மேல்நிலைப்பள்ளித் துணைமுதல்வரும் தமிழாசிரியருமான   நா.முத்துபாஸ்கரன்,   கொப்பனாப்பட்டி முநாசெ உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் கும.திருப்பதிமருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் மகா.சுந்தர்,  திருமயம் அரசுமேல் நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் வள்ளியப்பன், காவேரிநகர் அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் முனைவர் சு.துரைக்குமரன், ஏ.மாத்தூர் மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் குருநாதசுந்தரம்,  சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் கிருஷ்ணவேணிஆகியோருடன் மாஆக பயிற்சி நிறுவனத் தமிழ் விரிவுரையாளர் திருமுருகன் ஆகியோர் நடத்தினர்.
----------------------------------------------------------------------------------- 
செய்தி வெளியீட்டுக்கு நன்றி - 
தினமணி,தினகரன்-திருச்சிப்பதிப்பு நாளிதழ்கள்-31-05-2013.
----------------------------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக