‘மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும’


‘மத்தியிலும் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும’

தினமணி - 30.01.1997

தமிழ் வளர்ச்சி கருத்தரங்கில் (இடமிருந்து) போப் ஆதவன் சுஜாதா முத்துக்குமரன் ஞானி முத்துநிலவன் செந்தி;ல்நாதன் தேனிரா பாண்டியன்.

ஓசூர்ஜன.28- தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஒசூரில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒசூர்கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலை. முன்னால் துணைவேந்தர் முத்துக்குமரன் எழுத்தாளர் சுஜாதா பத்திரிகையாளர் ஞாநி தமிழ் நாடு- புதுவை மாநில வழக்கறிஞர்  சங்கங்களின் கூட்டமைப்புத் துணைத் தலைவர் தேனிரா. பாண்டியன் கவிஞர்  முத்துநிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளார் சங்கத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கிப் பேசினார.; பழ.பாலசுந்தரம் வரவேற்றார்.

செந்தில்நாதன் பேசியதாவது இந்தியாலுள்ள அனைத்தும் மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். இந்திக்கு மட்டும் தனி அந்தஸ்து தருவது சரியல்ல.
ஊர்களின் பெயரையும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளையும் மாற்றுவதால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது. நிர்வாக அளவில் மாற்றம் வந்தால்தான் தமிழ் வளர இயலும்.

சுஜாதா: அனைத்தையும் தனிதமிழில் வழங்கவேண்டும் என்பது இயலாத காரியம். சிலவற்றில் வார்த்தைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம். இம்மாதிரியான வாசகங்களை வாசகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நாமாக எதையும் முடிவு செய்யக் கூடாது.
தமிழ் எழுத்து வடிவம் தமிழில் தொழில்நுட்பச் சொற்கள் தமிழ்  விசைப்பலகை தமிழ்க் கணிப்பொறிக்கான குறியீடு போன்றவற்றை நிர்ணயிக்க தமிழக அரசின் உயர் கல்வி மன்றம் குழு ஒன்றை அமைந்தள்ளது. இக்குழுவின் பரிந்துரைகளைத் தமிழ் உலகம் ஏற்கும் போது இப்பணி ஒழுங்கு  பெற்று புதிய குறியீடுகளுக்கு வீணே செலவிடும் நேரம் குறையும்.
தகவல் தளம் அமைத்து அதில் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் உள்ளிடும் பணி தொடங்கியுள்ளது. இது தொடர வேண்டும். இப்பணியை அரசோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகமோ அரசு நிறுவமோ ஏற்றுக் கொண்டு ஒருமைப்படுத்த வேண்டும் . இதனால் தமிழின் பண்டை இலக்கியங்கள் அனைத்தும் நிரந்தரமாக இதனால் பாதுகாக்கப்படும்.
முத்துக்குமரன்: ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பதை இன்றைய பெற்றோர்  கௌவரமாகக் கருதுகின்றனர்.
தமிழை நம்முடைய மக்கள் புறக்கணிக்கக் காரணம்: ஆங்கிலம் படித்தால்தான் வேலை வாய்ப்பு கல்வி கிடைக்கும் என்ற தவறான கருத்து: ஆங்கிலம் படித்தவன் கெட்டிக்காரன் என்ற எண்ணம் : தமிழில் எளிதாக எழுதினால் அதை மதிப்பதில்லை. இத்தகைய கருத்துக்கள் மாற வேண்டும்;

ஞாநி: முன்பு பத்திரிக்கை படிக்கும் வழக்கம் குறைவு. பத்திரிகைகளும் குறையும.; மக்களுக்குப் புரியும் வகையில் வார்த்தைகளை நாம் தரவேண்டும். சுhதாரண மக்கள் மத்தியில் நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்றினால் புரியாது. மக்கள் பயன்படுத்தும் தமிழ் கலப்பு மிக்கது. ரேஷன் கார்டு என்றால் அவர்களுக்குத் தெரிகிறது. குடும்பள அட்டை என்றால் புரிவதில்லை அதே சமயம் புதிய  வார்த்தைகளைக் கொடுத்துவிட்டு அவற்றின் பழைய வார்த்தையை அடைப்புக் குறிக்குள் கொடுக்கலாம்.
பொதுவாகத் தமிழைச் சிதைப்பதில் நாளேடுகளை விட வார இதழ்களே அதிகப் பங்காற்றுகின்றனர்.

தேனிரா.பாண்டியன்: நீதி மன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தமிழில் இருக்கவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் ஆங்கிலமே நீதிமன்ற மெதழியாக உள்ளது.தாவா பைசல் வியாஜ்ஜியம் ஜப்தி சம்மன் சிரஸ்தார் போன்ற வார்த்தைகள் இன்னும் நீதிமன்றங்களில் புழக்கத்தில் உள்ளன.
அனைத்துச் சட்டங்களும் இன்றைய காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மக்கள் அறியச் செய்யவேண்டியது அரசின் கடமை.
முத்துநிலவன்: நடைமுறை தமிழ் பேசுகிறவர்களே தமிழை வளர்க்க முடியும். தமிழ் உணர்வு வெறியாமாறுவது தமிழ் வளர்ச்சியை  பாதிக்கும். தமிழிசை  இன்று மறக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொடர்புச் சாதனங்களில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. தமிழ் மொழியில் உள்ள சில சிறப்புகள் ஆங்கிலத்திலும் உண்டு. அதை குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். தனித்தமிழில் பேசுவோரை கிண்டல் செய்வது தவறானது. அதேசமயம் வார்த்தைகளை வலிந்து திணிப்பதும் தவறானது. அறிவியல் தமிழ்ச் சொற்களை கண்டுபிடிப்பது ஊக்குவிக்கப்படவேண்டும்.
நிகழ்ச்சியில் ஓசூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதவன் போப் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சில முக்கிய நகரங்களில் தமிழில் தந்தி அனுப்பும் முறை உள்ளது. இது கிராமங்களில் விரிவுபடுத்தப்படவில்லை இதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசியலமைப்ப சட்டத்தின் எட்டாவது  அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் மத்தியிலும் ஆட்சி மொழியாக்கச் சட்ட திருத்தம வேண்டும் என்பதை உள்ளிட்ட தீர்மானங்கள் கருத்தரஙகில் கொண்டு வரப்பட்டன.

2 கருத்துகள்:

  1. சுஜாதா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். தனித்தமிழ் என்பது தேவையில்லாத ஒன்று. மற்றமொழி கலப்பு இருப்பதில் தவறொன்றும் இல்லை. ஆங்கிலத்தில் இல்லாத மொழிக்கலப்பா? அதனால்தான் அது வேகமாக முன்னேறுகிறது.

    பதிலளிநீக்கு