“புதிய மரபுகள்” - எனது கவிதைத் தொகுப்புக் கவிதைகள் - 3


என்சீர் வருத்தம்!

காப்பித்தூள் கடைமாற்றி வாங்க, வழியில்
               காய்கறிக்காரன் பார்க்க, பல்லைக் காட்ட
 “சாப்பாடு இல்லை, ‘கேஸ்’ இல்லை மதியம்
               சமாளியுங்கள்” என மனைவி முகத்தைப் பார்க்க
‘மோப்பெட்டில்’ ரிசர்வு வர, பிள்ளை முணு முணுக்க,
                மூன்றாம் தவணை டீவிக் காரன் திட்ட,
நாய்ப்பாடு பட்டு வரும் நடுத்தர வர்க்கம்
                 நாளொரு பொழுதாகி வரும் நடுத்தெரு வர்க்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக