இராம. கோபாலனுக்கு பாரதி சொன்ன பதில்!


இராம. கோபாலனுக்கு பாரதி சொன்ன பதில்! - நா.முத்துநிலவன்
தீக்கதிர் -- 22.09.1997


(டிசம்பர்-24. இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள்.
இன்னும் தலைவிரித்து ஆடிவரும் சாதியத்தின் அடையாளமாக ‘பரமக்குடி துப்பாக்கிச் சூடு’ நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. ஆயினும், ஆறுதலாக, அதுபற்றிய மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் நேற்று ஆணையிட்டடிருப்பதாகச்  செய்தி வந்திருக்கும் பின்னணியில், எனது முந்திய படைப்பு ஒன்றினை இன்று நம் தளத்தில் இடுகிறேன்…  --நா.முத்து நிலவன், 24-12-2011)


                        விநாயகர் சதுர்த்தி வந்தாலே முற்போக்குவாதிகள் ‘சாமியாட’  ஆரம்பித்து விடுவதாக இராம கோபாலன் கூறியுள்ளார்.
பேயோட்ட வருபவர்கள் சாமியாடுவது இவர்கள் வளர்த்த சம்பிரதாயம் தானே? இதற்கு வருத்தப்பட்டு எi;ன செய்;வது?
                       ‘இந்துக்கள் ஒன்று பட்டால் மற்றவர்களுக்கு ஏன் பதற்றம் ஏற்பட வேண்டும்? என்றும் கேட்கிறார். சரியான வழியில் ஒன்று பட்டால் சங்கடம் ஏதமில்லை. வெறியான. வகையில் வெகுண்டெழுந்தால்..? குழந்தையின் கையில் பொம்மைத் துப்பாக்கியிருந்தால் பயப்படுவது போல நடித்து மகிழ்வோம். அதுவே வீச்சரிவாளைத் தூக்கிக் கொண்டு வந்தால்…? அதற்கு ஆபத்து தானே என்று அஞ்சமாட்டோமா? அஞ்சுவது அஞ்சாமை பேதைமையல்லோ?
                      “சும்மா கூடுகிறார்கள்… திரட்டப்படவில்லை… அவர்களாகவே திரள்கிறார்கள்” என்று சொல்லித்தானே ‘டிசம்பர்-ஆறு’  நம் பாரதத்தாயின் நெஞ்சில் ஆறாத புண்ணாகிவிட்டது? இப்போது வெந்த புண்ணில் வேல்பாய்ச்ச வருவோரை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.
                    ‘இந்து இயக்கங்கள் எதைச் செய்தாலும் அதன் பின்னணியில் அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது’ என்ற வாதம் அவர் சொல்வதுபோல வேடிக்கையானதல்ல. அயோத்தி சம்பவத்திற்குப் பிறகு இந்துக்களின் மத உணர்வை வெறியாக தூண்டிவிட்டு இவர்களின் கூட்டாளிகள் அரசியல் வாபம் அடைந்தார்களா இல்லையா?
                       இராவணனும் சீதையும் ஒரே கட்சியில் சேர்ந்ததும் ஜெயித்ததும். ருhமன் - பாவம்-தோற்றப்போனதும் இவர்களின் அரசியல் கூனித்தனமன்றி வேறென்ன? ‘டெல்லி செங்கோட்டையின் -வழி அயோத்தி’ என்பதுதானே இவர்களின் ‘மத்திய ‘ நோக்கம்?
அகில இந்திய அளவில அம்பேத்காரும். வேறு பல தேசபக்த இயக்கங்களும். தமிழக அளவில் பெரியாரும். பி. ராமமூர்த்தியும் ஜீவாவும் போட்டு வளர்த்த சமத்துவ சமூக விதைகளை அழித்து குழிபறிக்கும் வேலையைச் செய்யவரும் குள்ள நரிகளுக்கு இப்போது ‘செயின்ட்-ஜார்ஜ் கோட்டை தான் மாநில நோக்கம் - வழி விநாயகர் வெறி என்பது புரியாதா என்ன?
                       விநாயகர் ஊர்வலம் நடத்துவது இரண்டு காரணங்களுக்காக என்கிறார்.
                       ஓன்று – தெய்வ பக்தியை வளர்ப்பதாம்.
                       இதை வாதத்துக்கு ஏற்றுக்கொண்டாலும் பச்சைக் குழந்தைகளும் விரும்பம் ‘பால விநாயகக் கடவுளை சூல விநாயக’மாகவும் வீர விநாயக ராகவும் ஆயதமேந்திவரச் செய்வது-ஒரு புகைப்படத்தில் வந்தது போல – ஏ.கே.47 ஏந்திவரச் செய்வது கூட ‘மாடர்னைஸேஷனா’ சுவாமிகளே! என்ன பிதற்றலிது!
                     இன்னொன்று – தேச பக்தியை வளர்க்கவாம்! 90 ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதி உடைத்து நொறுக்கிவிட்டபிறகும் வைக்கப்படும் உளுத்துப் போன வாதமிது!
                     இராம. கோபாலன் சொல்வது போல விநாயகர் ஊர்வலத்தைப் பயன்படுத்தி இந்துக்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் திலகர்தான்.
                    அதுபற்றி மட்டுமல்ல துர்க்கா ப+ஜையை பாரதமாதா வீர வழிபாடாகவும் சிவாஜி மகோத் சவத்தை சுதந்திர உணர்வைச் சுண்டியெழுப்பும் விதமாவும் வடமாநிலங்களில் நடத்திய போது இதன் ஒரு பகுதி எழுச்சியை வரவேற்ற பாரதி மறுபகுதியில் வீர சுந்திரம் வேட்கையோடியிருந்த முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் தனிமைப்பட்டுவிட்ட அபாயத்தை அடையாளம் கண்டு எழுதியதை ஏன் மறைக்கிறீர்கள்!
                  பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகை தலையங்க வரிகளைப் பாருங்கள்:
“பாரத மாதாவின் வயிற்றில் பிறந்த சகோதரர் என நமக்குள் சிறு சச்சரவுகளை கிஞ்சித்தேனும் நினையாமல் நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை  எல்லாரும் ஒன்று  சேர்ந்து ப+ஜிப்பதே நமது கடமை இதை நாமெல்லாரும் நமது மகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்’’ – (இந்தியா – 23.6.1906)
                       “இந்திய ஹிந்துவுக்கு  மட்டும் சொந்தமில்லை. மகமதியருக்கும் சொந்தமே. பொது மாதவாகிய பாரததேவியின்  பொது நன்மையையே கவனிக்க வேண்டுமெயல்லாமல் ஜாதி மத குல பேதங்களைப் பாராட்டி தேசத்தை மறக்கும் மனிதனை பாரததேவி சர்வ சண்டாளராகவே கருதுவாள்” – (இந்தியா-11.8.1906)
                         அவ்வளவுதான் வேறென்ன சொல்ல?
                          பாரதியே பதில் சொல்லிவிட்டுப் போன பழைய கேள்வியை எழுப்பி – மதங்களில் பேரால் அடித்துக் கொண்டு நானும் அக்கம் பக்கத்து நாடுகளைப் பார்த்து தெளிவடையாமல்- நூறாண்டுக்குப் பின்னுக்கு இழுக்கும் வேலையை பிற்போக்கு மதவாதிகள் இனியாவது நிறுத்திக் கொள்ளவேண்டும்.
                        கலைஞரின் பராசக்தி வசனம் இன்றும் பொருந்துகிறது கோயில் கூடாது என்பதல்ல கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது.                        
                         சமுதாய மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் சொல்லிவந்தது போல – ஆன்மீகமும் தேசபக்தியும் மோதுமிடம் வருமானால் தேசபக்தியின் பக்கம் நிற்பவனே இன்றைய இந்தியாவுக்குத் தேவை.
                         தெய்வ பக்தியின் பேரால் தேசபக்திக்கு ஊறுவிளைவிப்போர் அவர்கள் வணங்கும் தெய்வத்துக்கும் ஊறுவிளைவிப்பவரே என்பதை மத அடிப்படைவாதிகள் உணரவேண்டும். அவர்கள் உணராதது போல நடித்து அப்பாவி மக்களை ஏமாற்றும் வரை – முற்போக்கு வாதிகள் சாமியாடிக் கொண்டுதான் இருப்போம்.

1 கருத்து:

  1. மஹா கவி பாரதி என்றோ சொன்னது இன்றும் பொருந்து கிறது பாருங்கள்.. முத்து நிலவன் அய்யா.கட்டுரை அருமை. உண்மையை சொல்லும்போது சில நேரம் கசக்கும். ஆனால் உண்மை உண்மை னே.

    பதிலளிநீக்கு